அப்துல்ரகுமான்
அப்துல்ரகுமான்
முனைவர்
சை. அப்துல்ரகுமான் |
|
![]() கவிக்கோ |
|
பிறப்பு
|
|
இருப்பிடம்
|
சென்னை
|
தேசியம்
|
|
மற்ற பெயர்கள்
|
அருள்வண்ணன்
|
கல்வி
|
கலை
முதுவர்
முனைவர் |
பணி
|
பேராசிரியர்
|
பணியகம்
|
இசுலாமியக்
கல்லூரி, வாணியம்பாடி
|
அறியப்படுவது
|
சர்ரியலிசக்
கவிதைகள்
|
சமயம்
|
இசுலாம்
|
பெற்றோர்
|
மஹி
என்னும் சையத்அஹமத்– ஜைனத் பேகம்
|
பிள்ளைகள்
|
மகன்; மகள்
|
இணையதளம்
|
|
அப்துல்ரகுமான்,(பிறப்பு: நவம்பர் 2, 1937), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று
சிறப்பாகக்குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக்கவிஞர்களோடுஇணைந்தியங்கியவர். எழுதுபவர்களின்தலைவாயிலில் தம்
கவிதை வெளியீடுகளின்வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில்
நிலைநிறுத்திக்கொண்டவர்களுள்அப்துல்ரகுமான்சிறப்பாகக்குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு
சோதனைப்படைப்பாளியாகஇனங்காட்டிக்கொண்டார். அத்தொகுதிவெளிவந்தபோதுகவிதையைநேரடியாகத்
தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டுமுறையைஅமைத்துக்கொண்டார்.
தமிழில்கவிதைக்குறியீடுகள்குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய
பிறமொழிஇலக்கியங்களைமுனைந்ததிலும்பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர்
கவியரங்கக்கவிதைகளாலும்சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால்கேட்போரைக்கவர்வது
இவரது பாணி.வாணியம்பாடி இஸ்லாமியக்கல்லூரியில்தமிழ்ப்பேராசிரியராகப்
பணி புரிந்தவர்.அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறைகவிஞர்களுக்குஆசானாகவிளங்கினார்.ஆலாபனை கவிதைத்தொகுப்புக்காகசாகித்ய
அகாடமி விருது பெற்றவர்.
பொருளடக்கம்
அப்துல்ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி
என்னும் சையத்அஹமத்– ஜைனத் பேகம் இணையருக்குமகனாகப் பிறந்தார்.
அப்துல்ரகுமான் தனது
தொடக்கக்கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக்கல்வியையும்மதுரையில் உள்ள
பள்ளிகளில்பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை
வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலைபட்டங்களைப்பெற்றார். அப்பொழுது
முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம்பயின்றார்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத்தமிழாராய்ச்சிநிறுவனத்தில் அதன் இயக்குநராகப்
பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில்
குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்
பெற்றார்.
தமிழில்முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய தமிழ்நாடு
என்னும் நாளிதழில்மெய்ப்புதிருத்துநராகச்சிலகாலம்பணியாற்றினார். அப்பொழுது
தமிழகத்தில் இருந்த ஐந்து இசுலாமியக்கல்லூரிகளுக்கு [1] விரிவுரையாளர் பதவிக்காகவிண்ணப்பித்தார்.
அவற்றுள்வாணியம்பாடிஇசுலாமியக்கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம்
ஆண்டில்வாய்ப்புக் கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், எனப் படிப்படியாக உயர்ந்து 1991ஆம்
ஆண்டில்விருப்ப ஓய்வுபெற்றார். இதில் 20 ஆண்டுகள்
தமிழ்த்துறையின்தலைவராகப்பணியாற்றினார்.
வ.எண்
|
ஆண்டு
|
நூல்
|
வகை
|
குறிப்பு
|
01
|
1974
|
பால்வீதி
|
||
02
|
1978
|
நேயர் விருப்பம்
|
கவிதை
|
|
03
|
1985
|
கரைகளேநதியாவதில்லை
|
||
04
|
1986
|
அவளுக்கு நிலா
என்று பெயர்
|
கட்டுரை
|
சூனியர்விகடனில்வெளிவந்த
தொடர்
|
05
|
1986
|
முட்டைவாசிகள்
|
கட்டுரை
|
சூனியர்விகடனில்வெளிவந்த
தொடர்
|
06
|
1986
|
மரணம்
முற்றுப்புள்ளி அல்ல
|
கட்டுரை
|
சூனியர்விகடனில்வெளிவந்த
தொடர்
|
07
|
1987
|
விலங்குகள் இல்லாத
கவிதை
|
கட்டுரை
|
|
08
|
1987
|
சொந்தச் சிறைகள்
|
சூனியர்விகடனில்வெளிவந்த
தொடர்
|
|
09
|
1989
|
புதுக்கவிதையில்
குறியீடு
|
ஆய்வு
|
முனைவர் பட்ட
ஆய்வேடு
|
10
|
1989
|
சுட்டுவிரல்
|
||
11
|
1990
|
கம்பனின் அரசியல்
கோட்பாடு
|
ஆய்வு
|
|
12
|
1995
|
கவிதை
|
||
13
|
1998
|
பித்தன்
|
கவிதை
|
|
14
|
1998
|
விதைபோல்விழுந்தவன்
|
||
15
|
1998
|
முத்தமிழின் முகவரி
|
கவியரங்கக்
கவிதைகள்
|
|
16
|
1999
|
பூப்படைந்த சபதம்
|
கட்டுரை
|
|
17
|
1999
|
தொலைப்பேசிக்
கண்ணீர்
|
கட்டுரை
|
|
18
|
2003
|
காற்று என் மனைவி
|
கட்டுரை
|
|
19
|
2003
|
உறங்கும் அழகி
|
கட்டுரை
|
|
20
|
2003
|
நெருப்பை அணைக்கும்
நெருப்பு
|
கட்டுரை
|
|
21
|
2003
|
பசி எந்தச் சாதி
|
கட்டுரை
|
|
22
|
2003
|
நிலவிலிருந்துவந்தவன்
|
கட்டுரை
|
|
23
|
2003
|
கடவுளின் முகவரி
|
கட்டுரை
|
|
24
|
2003
|
முத்தங்கள்ஓய்வதில்லை
|
கட்டுரை
|
|
25
|
2004
|
காக்கைச் சோறு
|
கட்டுரை
|
|
26
|
2004
|
சோதிமிகுநவகவிதை
|
கட்டுரை
|
|
27
|
2004
|
மின்மினிகளால் ஒரு
கடிதம்
|
கவிதை
|
கஜல் கவிதைகள்
|
28
|
2005
|
தாகூரின்'சித்ரா'
|
||
29
|
2005
|
ரகசிய பூ
|
கவிதை
|
|
30
|
2005
|
சிலந்தியின் வீடு
|
கட்டுரை
|
|
31
|
2005
|
இது சிறகுகளின்
நேரம்
|
கட்டுரை
|
சூனியர்விகடனில்வெளிவந்த
தொடர்
|
32
|
2006
|
இல்லையிலும்
இருக்கிறான்
|
கட்டுரை
|
|
33
|
2006
|
பறவையின் பாதை
|
கவிதை
|
|
34
|
2007
|
இறந்ததால்பிறந்தவன்
|
கவியரங்க கவிதை
|
முதல் தொகுதி
|
35
|
2008
|
தட்டாதேதிறந்திருக்கிறது
|
கட்டுரை
|
|
36
|
2010
|
எம்மொழிசெம்மொழி
|
கட்டுரை
|
|
37
|
2010
|
பூக்காலம்
|
கட்டுரை
|
|
38
|
2011
|
தேவகானம்
|
கவிதை
|
|
39
|
கண்ணீர்
துளிகளுக்கு முகவரி இல்லை
|
கவிதை
|
||
40
|
2013
|
பாலை நிலா
|
கவிதை
|
·
முத்தாரத்தில்வெளிவந்த கேள்வி - பதில்
·
ஆனந்தவிகடனில்வெளிவந்தஈழ வரலாறு
·
கவியரங்கக் கவிதைகள்
·
குணங்குடியார்பாடற்கோவை
·
ஐந்து சிறுகவிதைத்தொகுப்புகள்
கவிக்கோ என அழைக்கப்படும்
அப்துல்ரகுமானுக்கு பல்வேறு விருதுகள் பல்வேறு அமைப்புகளால்வழங்கப்பட்டன. அவை
வருமாறு:
வ.எண்
|
ஆண்டு
|
விருது
|
வழங்கியவர்
|
குறிப்பு
|
1
|
1986
|
கவியரசர்பாரிவிழா
விருது
|
குன்றக்குடிஅடிகளார்
|
|
2
|
1989
|
தமிழன்னை விருது
|
தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்
கழகம்
|
இவ்விருதுபுதுக்கவிதைக்காகவழங்கப்பட்டது
|
3
|
1989
|
பாரதிதாசன் விருது
|
தமிழக அரசு
|
|
4
|
1989
|
கலைமாமணி விருது
|
தமிழக அரசு
|
|
5
|
1992
|
அக்ஷர விருது
|
அக்னி
|
|
6
|
1996
|
சிற்பி அறக்கட்டளை
விருது
|
கவிஞர் சிற்பி
அறக்கட்டளை
|
|
7
|
1997
|
கலைஞர் விருது
|
தி. மு,க.
|
ஒரு இலட்சம் ரூபாய்
|
8
|
1998
|
ராணாஇலக்கிய விருது
|
||
9
|
1999
|
சாகித்ய அகாடமி
விருது
|
சாகித்ய அகாடமி, டெல்லி
|
ஆலாபனை
கவிதைத்தொகுதிக்காகவழங்கப்பட்டது
|
10
|
2006
|
கம்ப காவலர்
|
கொழும்பு கம்பன்
கழகம், இலங்கை
|
|
11
|
2007
|
பொதிகை விருது
|
பொதிகை
தொலைக்காட்சி, சென்னை
|
|
12
|
2007
|
கம்பர் விருது
|
கம்பன் கழகம், சென்னை
|
|
13
|
சி. பா.
ஆதித்தனார்இலக்கிய பரிசு
|
தினத்தந்தி நாளிதழ்
|
ஒரு இலட்சம் ரூபாய்
|
|
14
|
2008
|
உமறு புலவர் விருது
|
ஒரு இலட்சம் ரூபாய்
|