திருஞானசம்பந்தர்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

திருஞானசம்பந்தர்

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

திருஞானசம்பந்தர்



திருஞானசம்பந்தர்
வாழ்க்கை குறிப்பு:
  • இயற்பெயர்   = ஆளுடையபிள்ளை
  • பெற்றோர்   = சிவபாதஇருதயார், பகவதி அம்மையார்
  • ஊர் = சீர்காழி(தோணிபுரம், பிரம்மபுரம், வேணுபுரம்)
  • மனைவி = சொக்கியார்
  • வாழ்ந்த காலம் = 16 ஆண்டுகள்
  • மார்க்கம் = கிரியை என்னும் சத்புத்திர மார்க்கம்
  • நெறி = மகன்மை நெறி
  • ஆட்கொள்ளட்பாட இடம்       = சீர்காழி
  • இறைவனடி சேர்ந்த இடம்      = பெருமணநல்லூர்
  • இவரின் தமிழ் = கொஞ்சு தமிழ்
படைப்புகள்:
  • 1,2,3 ஆம் திருமுறைகள்
  • முதல் மூன்று திருமுறைகள் =”திருகடைகாப்பு” எனப்போற்றுவர்
வேறு பெயர்கள்:
  • ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)
  • திருஞானம் பெற்ற பிள்ளை
  • காழிநாடுடைய பிள்ளை
  • ஆணைநமதென்ற பெருமான்
  • பரசமயகோளரி
  • நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தம்(சுந்தரர்)
  • திராவிட சிசு(ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்யலகரி என்னும் நூலில்)
  • இன்தமிழ் ஏசுநாதர்
  • சத்புத்திரன்
  • காழி வள்ளல்
  • முருகனின் அவதாரம்
  • கவுணியர்
  • சந்தத்தின் தந்தை
  • காழியர்கோன்
  • ஞானத்தின்திருவுரு
  • நான் மறையின்தனித்துணை
  • கல்லாமல் கற்றவன்(சுந்தரர்)
நிகழ்த்தியஅற்புதங்கள்:
  • திருமறைக்காடு = மூடிய கோயில் கதவுகளைபாடித் திறக்க செய்தார்.
  • திருப்பாச்சிலாச்சிரமம் = மழவன் மகளின் முயலகன் நோய் நீக்கினார்
  • திருமருகல் = பாம்பு தீண்டியவணிகனின்விடம்நீக்கினார்
  • திருவோத்தூர் = ஆண்பனையைபெண்பனைஆக்கினார்
  • மதுரை = தான் தங்கியிருந்தமடத்திற்குக் கூன்பாண்டியன் வைத்த நெருப்பை அவனுக்கே வெப்பு நோயாகப்பற்றச் செய்தார். அவன் மனைவி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் வேண்ட, நீறு பூசி அவனின் வெப்பு நோய் நீக்கி, அவனின் கூன் நீக்கச் செய்து அவனை “நின்றசீர்நெடுமாறன்” ஆகினார்.
  • மதுரை = வாதத்துக்குஅழைத்தபுத்தநந்தியின் தலை துண்டாகுமாறு செய்தார்.
  • மயிலாப்பூர் = குடத்தில் சாம்பலாக இருந்த பூம்பாவை என்னும் பெண்ணை உயிருடன் வரச் செய்தார்.
  • திருஏடகம் = வைகையாற்றில்இட்ட ஏடு கரை ஏறியது.
  • திருப்பூந்துருத்தி = நாவுக்கரசர் இவரை சுமந்த இடம்.
இறைவனிடமிருந்துபெற்றவை:
  • திருகோலக்காவில்    = பொற்றாளம்
  • திருவாடுதுறை                = பொற்கிழி
  • திருவீழிமிழலை       = படிகாசு
  • திருவாயிலறத்துறை   = முத்துச்சிவிகை
  • பட்டீஸ்வரம்           = முத்துப்பந்தல்
குறிப்பு:
  • மூன்று வயதில் இவருக்கு உமையம்மையே நேரில் வந்து இவருக்கு “ஞானப்பால்” ஊட்டினார். அன்று முதல் இவர் “ஞானசம்பந்தன்” எனப் பெயர் பெற்றார்.
  • இவர் தந்தையாரின் தோளில் அமர்ந்தவாறேசிவத்தலங்கள் சென்று பாடினார்.
  • இவரின் அனைத்துப் பதிகங்களிலும்எட்டாவது பாடல் “இராவணன்” பற்றியும், ஒன்பதாவது பாடல் “மாலும்அயனும்” காண இயலாத சிவபெருமானின்பெருமையும், பத்தாவது பாடல் “சமணபௌத்தசமயங்கள்” துன்பம் தரும் தீங்கினைஉடையன என்றும் பாடும் பாங்கினைகொண்டுள்ளன.
  • 16 ஆண்டுகள் மட்டுமே இவர் உயிருடன் வாழ்ந்தார்.
  • அந்தணரானசம்பந்தர் தாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாணர் குளத்தை சேர்ந்த திருநீலகண்டயாழ்பாணரை அழைத்து செல்வார்.
  • இவர் தன்னை தானே “தமிழ் ஞானசம்பந்தன்” என அழைத்துக்கொள்வார்
  • மதுரையில்அனல்வாதம், புனல்வாதம் செய்து சமணர்களைதோற்கடித்தார். தோல்வி தாங்காமல் 8000 சமணமுனிவர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர்.
  • இவரின் தோழர் = சிறுத்தொண்டர்எனப்படும்பரஞ்சோதியார்
  • ஞானசம்பந்தர் 16000 பதிகம் பாடியதாகநம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். ஆனால் நமக்கு கிடைத்தது 384 பதிகங்கள் மட்டுமே.
  • கிடைக்கும் மொத்தப்பாடல்கள் = 4181
  • 220 திருத்தலங்களுக்கு சென்று பாடியுள்ளார்.
  • சம்பந்தரும்நாவுக்கரசரும் சந்தித்த இடம் = திருப்புகலூர்
சிறப்பு:
  • தந்தை இல்லாமல் சென்ற இடங்களில் சிறுவனான இவரை, திருநாவுக்கரசர் தம் தோளில் சுமந்து சென்றுளார்.(இடம் = திருப்பூந்துருத்தி)
  • திருநாவுக்கரசரை “அப்பர்” எனப் பெயர் இட்டு அழைத்தார்.
  • இவரின் நெறி = மகன்மை நெறி
  • இவரின் மார்க்கம் = சத்புத்திர மார்க்கம்
  • சேக்கிழார் தமது பெரியபுராணத்தில், “வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க இவர் தோன்றினார்” எனப் பாராட்டினார்.
  • தம் பாடல்களில்23 பண் அமைத்துப்பாடியுள்ளார்.
  • ஏறத்தாழ 110 சந்தங்களை தன் பாடல்களில்அமைத்துப்பாடியுள்ளார். எனவே இவரை, “சந்தத்தின் தந்தை” என்று கூறுவர்.
  • யமகம், மடக்கு முதலிய சொல்லணிகட்கும், சித்திரகவிக்கும்முதன் முதலில் தொடங்கி வைத்தவர்சம்பந்தரே ஆவார்.
  • சேக்கிழார் பெரியபுராணத்தில் ஏறக்குறைய பாதிக்கு பாதி சம்பந்தர் வரலாறு இடம் பெறுவதால் “பிள்ளை பாதி புராணம் பாதி” எனப்போற்றப்படுகிறது.
  • இவர் “முருகனின்அவதாரமாகவே” கருதப்பட்டார்.
  • யாழ முறி இவருக்கு மட்டுமே உரியது.
மேற்கோள்:
  • காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
    ஓதுவார் தமைநன்னெறிக்குஉய்ப்பது
    வேத நான்கினும்மெய்ப்பொருளாவது
    நாதனாமநமச்சிவாயமே
  • சிறையாரும்மடக்கிளியே இங்கே வா தேனொடுபால்
  • ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
     
    சனி பாம்பிரண்டுமுடனே
    ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
    அடியாரவர்க்குமிகவே