பேச்சுக்கலை

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

பேச்சுக்கலை

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)

பேச்சுக்கலை

பேச்சுக்கலை
பேச்சுக்கலை:
  • நுண்ணிய நூல்பலகற்றவற்கேஅமையத்தக்கஅரியதொருகலையேபேச்சுக்கலை.
மேடைப்பேச்சில் நல்ல தமிழ்:
  • மேடைப்பேச்சில் நல்ல தமிழை கொண்டு மக்களைஈர்த்தவர்கள்திரு.வி.க, அண்ணா, ரா.பி.சேதுபிள்ளை, நாவலர் சோமசுந்தரபாரதியார், குன்றக்குடிஅடிகளார்.
பேச்சும் மேடைப்பேச்சும்:
  • பேச்சில் உணர்ந்ததைஉணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோஉணர்ந்ததனைஉணர்த்தும் வகையிலும் தெரிவித்தல் வேண்டும்.
  • பேச்சில் கேட்கின்றவனைக்கேட்கின்றவனாகவேமதிக்கலாம். ஆனால், மேடைப்பேச்சிலோகேட்கின்றவனைமதிப்பிடுவோனாக மதித்தல் வேண்டும்.
பேச்சுக்கலையில்மொழியும் முறையும்:
  • மேடைப்பேச்சுக்குகருத்துகளே உயிர்நாடி என்றாலும், அக்கருத்துக்களை வெளியிடும் மொழியும் முறையும் இன்றியமையாஇடத்தைப்பெறுகின்றன.
  • கருத்தைக் விளக்க மொழி கருவியாக உள்ளது.
முக்கூறுகள்:
  • பேசும் பொருளை ஒழுங்குமுறைக்குக்கட்டுப்படுத்திக் தொடக்கம், இடைப்பகுதி, முடிவு எனப்பகுத்துக்பேசுவதையேபேச்சுமுறை என்கிறோம்.
  • இதனை எடுத்தல், தொடுதல், முடிதல் எனவும் கூறலாம்.
எடுத்தல்:
  • பேச்சை தொடங்குவது எடுப்பு.
  • தொடக்கம் நன்றாக இராவிட்டால்கேட்பவர்களுக்குப்பேச்சினை குறித்த நல்லெண்ணம் தோன்றாது.
  • சுருக்கமான முன்னுரையுடன் தொடங்க வேண்டும்.
தொடுத்தல்:
  • தொடக்கவுரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும் முறை தொடுத்தல்எனப்படும்.
  • இடையிடையே சுவைமிக்கசொற்களும்குணமிக்ககருத்துகளும்பிணைத்துப்பேசுவதேதொடுத்தல்எனப்படும்.
பேச்சின் அணிகலன்:
  • எண்ணங்களைச் சொல்லும் முறையால் அழகு படுத்துவதே அணி எனப்படும்.
  • கேட்போர் சுவைக்கத்தக்கஉவமைகள், எடுத்துக்காட்டுகள், சொல்லாட்சிகள், பல்வேறு நடைகள், சிறுசிறு கதைகள் முதலியன அமையப்பேசுவதே சிறந்த பேச்சாகும்.
உணர்த்தும் திறன்:
  • உணர்ச்சி உள்ள பேச்சே உயிருள்ள பேச்சாகும்.
  • பேச்சாளர், தாம் உணர்ச்சிவயப்படாது, கேட்போரின்உள்ளத்தில் தாம் விரும்பும்உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் வேண்டும்.
முடித்தல்:
  • பேச்சை முடிக்கும்போது தான், பேச்சாளர் தமது கருத்தை வற்புறுத்தவும் கேட்போர் மனதில் பதியுமாறுசுருக்கிக் கூறவும் கூடும்.
  • பேச்சின்சுருக்கத்தைக் கூறி முடித்தல், உணர்ச்சியைத் தூண்டும் முறையில் முடித்தல், பாராட்டி முடித்தல், பொருத்தமான கவிதையைக் கூறி முடிதல் என முடிக்கும் முறைகள் பல உள்ளன.