பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV

பிறப்பு
அ.கல்யாணசுந்தரம்
ஏப்ரல் 131930
செங்கப்படுத்தான்காடு
இறப்பு
அக்டோபர் 8 1959 (அகவை 29)
நாட்டுரிமை
இந்தியா
எழுதிய காலம்
1955-1959
துணைவர்(கள்)
கௌரவம்மாள்
பிள்ளைகள்
க.குமரவேலு
  வாழ்க்கைக் குறிப்புபிறப்பு வளர்ப்பு குடும்பம்
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?
தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.

பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி

இது 1959-ல் பட்டுக்கோட்டையார் இந்த சமூகத்தை நோக்கி எழுப்பிய கேள்வி.
எழுத்தாற்றல்
பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
கம்யூனிஸ ஆர்வம்
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர்உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.
கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் செய்த தொழில்கள் நடித்தது மற்றும் பாட்டெழுதியது மட்டுமே...
கவிஞரை "சுந்தரம்" என்று எல்லோரும் அழைப்பார்களாம். உதவி என்று யார் அழைத்தால் ஓடி உதவி செய்வது அவரின் வழக்கம்.அவர் கண் முன்னே யாரும் துன்பப்படும்போது அவரால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாதாம். அப்படிப்பட்ட மிகப்பெரிய "பொதுநலவாதி". கவிஞர் உயரம் 6 அடிக்கு மேல் .. அவர் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தில் நீங்கள் கவனித்திருக்கலாம்.உடல் வலுவாக வாட்ட சட்டமாக இருந்ததால் எல்லோரும் கவிஞரை உதவிக்கு அழைப்பது வழக்கமாம்.
1.விவசாயி - விவசாய குடும்பத்தில் பிறந்ததால் விவசாயி
2. மாடு மேய்ப்பவன் - சிறுவயதில் கிராமத்தில் எல்லோரும் செய்கின்ற வேலை, ஆனால் அதை தொழிலாக செய்யவில்லை
3. மாட்டு வியாபாரி - விவசாய குடும்பத்தில் மாடுகள் இருக்கும் ,ஆனால் அதை வியாபாரமாக அவர் செய்யவில்லை
4. மாம்பழ வியாபாரி - அவர் வீட்டில் மாமரங்கள் இருந்தது ,அதை விற்றுத்தான் ஆகவேண்டும்.
5. இட்லி வியாபாரி - கவிஞர் இதை செய்யவில்லை ((யாருக்கேனும் உதவி செய்திருப்பார்) )6. முறுக்கு வியாபாரி - கவிஞர் இதை செய்யவில்லை ((யாருக்கேனும் உதவி செய்திருப்பார்) )
7. தேங்காய் வியாபாரி - அவர் வீட்டில் தென்னை மரங்கள்
இருந்தது , அதை விற்றுத்தான் ஆகவேண்டும்
8. கீற்று வியாபாரி - தென்னை மரம் இருந்தால் கீற்று இருக்கும், அதை விற்றுத்தான் ஆகவேண்டும்
9. மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி - சிறுவயதில் கவிஞர் பொழுதுபோக்கிற்காக செய்தது,ஆனால் அதை தொழிலாக செய்யவில்லை
10. உப்பளத் தொழிலாளி - அவர் கிராமத்திலிருந்து வேலைக்கு உப்பளத்திற்கு செல்வார்களாம் . அவர்களோடு சேர்ந்து கொண்டு செல்வார்.இரண்டு , மூன்று தடவை சென்றிருப்பார்.காரணம் என்னவென்று அறிந்தபோது மக்கள் உழைக்கையில் நாம் எப்படி ஒன்றும் செய்யாமல் இருப்பது என்ற எண்ணம் தானாம் !!!
11. மிஷின் டிரைவர் - கவிஞர் இதை செய்யவில்லை (யாருக்கேனும் உதவி செய்திருப்பார்)
12. தண்ணி வண்டிக்காரன் - அதிராம்பட்டினத்தில் (அதி வீரர் ராமர் பட்டினம் ) கையில் இழுத்து செல்கின்ற தண்ணீர் வண்டியை பயன்படுத்தி , இழுத்துக்கொண்டு ஒடுவராம்.ஒரு தடவை தண்ணீர் கொண்டு சென்றால் ரூபாய் மதிப்பில் "அனா" தருவார்களாம்.(பொதுவாக வெகுளியான மனம் , சிறு பிள்ளைத்தனமாக , எளிமையாகவும் நடந்துகொள்வாராம் )
13. அரசியல்வாதி - அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு சிந்தனையை தூண்டக்கூடிய பாடலை பாடினார்.
14. பாடகன் - நல்ல பாடகர் ,பாடிக்கொண்டு . தாளமிட்டுதான் பாடல் இயற்றுவாராம்
15. நடிகன் - நாடக மேடைகளில் நடித்திருக்கிறார்
16. நடனக்காரன் - நாடகத்தில் சிலக்காட்சிகளில் நடனமாடியிருக்கலாம்
17. கவிஞன் - உலகம் அறியும்
பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி
இது 1959-ல் பட்டுக்கோட்டையார் இந்த சமூகத்தை நோக்கி எழுப்பிய கேள்வி.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள் :
கருப்பொருள்:இயற்கை
[[பாடல் - படம் - வெளிவந்த ஆண்டு
·         1.ஆடுமயிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
·         2.ஓ மல்லியக்கா ( மக்களைப் பெற்ற மகராசி 1957 )
·         3.வம்புமொழி ( பாண்டித்தேவன்1959 )
·         4.வா வா வெண்ணிலவே ( செளபாக்கியவதி 1957 )
·         5.கனியிருக்கு ( எதையும் தாங்கும் இதயம் 1962 )
·         6.கொக்கரக் கொக்கரக்கோ சேவலே ( பதிபக்தி 1958 )
·         7.சலசல ராகத்திலே -கங்கையக்கா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
·         8.துணிந்தால் துன்பமில்லை ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
·         9.காக்காய்க்கும் ( பிள்ளைக் கனியமுது )
·         10.வா வா சூரியனே ( பாண்டித்தேவன் 1959 )
·         11.என்னருமை காதலிக்கு வெண்ணிலவே ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
கருப்பொருள்:சிறுவர்
·         12.குழந்தை வளர்வது அன்பிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
·         13.அன்புத் திருமணியே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
·         14.அமுதமே என் அருமைக்கனியே ( உலகம் சிரிக்கிறது 1959 )
·         15.செங்கோல் நிலைக்கவே - மகுடம் காக்க ( இரத்தினபுரி இளவரசி 1959 )
·         16.சின்னஞ்சிறு கண்மலர் ( பதிபக்தி 1958 )
·         17.அழாதே பாப்பா ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958)
·         18.ஆனா ஆவன்னா ( அன்பு எங்கே 1958 )
·         19.இந்த மாநிலத்தை பாராய் மகனே ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959)
·         20.சின்னப்பயலே...சின்னப்பயலே ( அரசிளங்குமரி 1958)
·         21.தூங்காதே தம்பி தூங்கதே ( நாடோடி மன்னன் 1958 )
·         22.திருடாதே பாப்பா திருடாதே ( திருடாதே 1961 )
·         23.ஏட்டில் படித்ததோடு இருந்துவிடுதே ( குமாரராஜா 1961 )
·         24.உன்னைக் கண்டு நானாட ( கல்யாண பரிசு )
கருப்பொருள்:காதல்,மகிழ்ச்சி,சோகம்
·         25.பக்கத்திலே இருப்பே ( தேடிவந்த செல்வம் 1958 )
·         26.வாடாத சோலை ( படித்த பெண் 1956 )
·         27.புது அழகை -ஆணும் பெண்ணும் ( அவள் யார் 1959 )
·         28.படிக்க படிக்க நெஞ்சிருக்கும் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
·         29.காலம் எனுமொரு ஆழக்கடலில் ( அமுதவல்லி 1959 )
·         30.உள்ளங்கள் ஒன்றாகி ( புனர்ஜென்மம் 1961)
·         31.இன்று நமதுள்ளமே ( தங்கப்பதுமை 1958 )
·         32.கழனி எங்கும் கதிராடும் ( திருமணம் 1958 )
·         33.ஆசை வைக்கிற இடந்தெரியனும் ( கலையரசி 1963 )
·         34.என்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 )
·         35.அன்புமனம் கனிந்தபினனே ( ஆளுக்கொருவீடு 1960 )
·         36.நீயாடினால் ஊராடிடும் ( பாண்டித் தேவன் 1959 )
·         37.வாடிக்கை மறந்ததும் ஏனோ ( கல்யாணபரிசு 1959 )
·         38.நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு ( இரும்புத்திரை 1960 )
·         39.வருஷத்திலே ஒருநாளு தீபாவளி ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959)
·         40.ஆசையினாலே மனம் ( கல்யாணபரிசு 1959 )
·         41.துள்ளி துள்ளி அலைகளெல்லாம் ( தலை கொடுத்தான் தம்பி )
·         42.பெண்ணில்லே நீ ( ஆளுக்கொருவீடு 1960 )
·         43.ஆண்கள் மனமே அப்படித்தான் ( நான் வளர்த்த தங்கை )
·         44.மஞ்சப்பூசி பூ முடிச்சு ( செளபாக்கியவதி 1957 )
·         45.கன்னியூர் சாலையிலே ( பொன் விளையும் பூமி 1959 )
·         46.போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் -தாலி ( வீரக்கனல் 1960 )
·         47.அடக்கிடுவேன் ( அவள் யார் 1959 )
·         48.எழுந்தென்னுடன் வாராய் ( தங்கப்பதுமை 1958 )
·         49.ஆடைகட்டி வந்த நிலவோ ( அமுதவல்லி 1959 )
·         50.மானைத் தேடி மச்சான் வர ( நாடோடி மன்னன் 1958 )
கருப்பொருள்:காதல்
·         51.துள்ளாத மனமும் துள்ளும் ( கல்யாணபரிசு 1959 )
·         52.அழகு நிலாவின் பவனியிலே ( மஹேஸ்வரி 1955 )
·         53.உனக்காக எல்லாம் உனக்காக ( புதையல் 1957 )
·         54.கண்ணுக்கு நேரிலே ( அலாவுதினும் அற்புத விளக்கும் 1957 )
·         55.முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப்பதுமை 1959 )
·         56.கற்பின் இலக்கணமே ( நான் வளர்த்த தங்கை 1958 )
·         57.எதுக்கோ இருவிழி ( செளபாக்கியவதி 1957 )
·         58.உன்னை நினைக்கையிலே ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
·         59.உன்னைக் கண்டு நானாட ( கல்யாணபரிசு 1959 )
·         60.ஆசை கொண்ட நெஞ்சிரண்டு ( இரும்புத்திரை 1960 )
·         61.மொகத்தைப் பார்த்து முறைக்காதிங்க ( விக்கிரமாதித்தன் 1962 )
·         62.இல்லாத அதிசயமா ( கற்புக்கரசி 1957 )
·         63.துடிக்கும் வாலிபமே ( மர்மவீரன் 1958 )
·         64.கன்னித் தீவின் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
·         65.வேல் வெல்லுமா ( மஹாலட்சுமி 1960 )
·         66.ஐயா நானாடும் நாடகம் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
·         67.மாந்தோப்பு வீட்டுக்காரி ( இரத்தினபுரி இளவரசி 1959 )
·         68.பார் முழுவதுமே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
·         69.கண்கள் ரெண்டும் வண்டு ( அமுதவல்லி 1959 )
·         70.ஊரடங்கும் வேளையிலே ( ரங்கோன் ராதா 1956 )
·         71.சின்னக் குட்டி நாத்துனா ( அமுதவல்லி 1959 )
·         72.இன்ப முகம் ஒன்று ( நான் வளர்த்த தங்கை 1958 )
·         73.அன்பு அரும்பாகி ( தலை கொடுத்தான் தம்பி 1959 )
·         74.ஒன்றுபட்ட கணவனுக்கு ( தங்கப்பதுமை 1959 )
·         75.பறித்த கண்ணைப் பார்த்துவிட்டேன் ( தங்கப்பதுமை 1959 )
·         76.ஓ...சின்ன மாமா ( செளபாக்கியவதி 1957 )
·         77.ஓ...கோ கோ மச்சான் ( செளபாக்கியவதி 1957 )
·         78.சிங்கார பூங்காவில் ஆடுவோமே ( செளபாக்கியவதி 1957 )
·         79.என்றும் இல்லாமல் ( கலைஅரசி 1963 )
·         80.நினைக்கும்போது நெஞ்சம் ( கலைஅரசி 1963 )
·         81.கண்ணாடிப் பாத்திரத்தில் ( புனர் ஜென்மம் 1961 )
·         82.உருண்டோடும் நாளில் ( புனர் ஜென்மம் 1961 )
·         83.மருந்து விக்கிற ( தங்கப்பதுமை 1959 )
·         84.மச்சான் உன்னைப் பாத்து ( பாசவலை 1956 )
·         85.சிங்கார வேலவனே ( செளபாக்கியவதி 1957 )
·         86.காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் ( கல்யாணபரிசு 1959 )
·         87.காதலிலே தோல்வியுற்றான் கன்னியொருத்தி ( கல்யாணபரிசு 1959 )
·         88.மங்கையரின்றி தனியாக ( குமார ராஜா 1960 )
·         89.கண்ணோடு கண்ணு ( நாடோடி மன்னன் 1958 )
·         90.மணமகளாக வரும் ( குமார ராஜா 1960 )
·         91.நான் வந்து சேர்ந்த இடம் ( குமார ராஜா 1960 )
·         92.ஆனந்தம் இன்று ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
·         93.சின்னப் பொண்ணாண ( ஆரவல்லி 1957 )
கருப்பொருள்:நகைச்சுவை
·         94.நந்தவனத்திலோர் ஆண்டி ( அரசிளங்குமரி 1958)
·         95.மாமா மாமா பன்னாடெ ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
·         96.காப்பி ஒண்ணு எட்டணா ( படித்த பெண் 1956 )
·         97.கோபமா என்மேல் ( குல தெய்வம் 1956 )
·         98.கையாலே கண்ணைக் கசக்கிக்கிட்டு ( குல தெய்வம் 1956 )
·         99.கோழியெல்லாம் கூவையிலே ( குல தெய்வம் 1956 )
·         100.காயமே இது மெய்யடா ( கற்புக்கரசி 1957 )
·         101.ராக் ராக் ராக் ராக் இண்ட்ரோல் ( பதிபக்தி 1958 )
·         102.சீவி முடிச்சிக்கிட்டு ( பிள்ளைக்கனியமுது 1958 )
·         103.இந்தியாவின் ராஜதானி டில்லி ( நான் வளர்த்த தங்கை 1958 )
கருப்பொருள்: கதைப்பாடல்
·         104.நாட்டுக்கு ஒரு வீரன் ( ரங்கோன் ராதா 1956 )
·         105.அடியார்கள் உள்ளத்தில் ( குலதெய்வம் 1956 )
கருப்பொருள்: நாடு
·         106.எங்கே உண்மை என் நாடே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
·         107. துள்ளி வரப் போறேன் ( திருமணம் 1958 )
·         108.ஒற்றுமையில் ஓங்கிநின்ற ( மர்ம வீரன் 1958 )
·         109.தஞ்சமென்று வந்தவரைத் ( கலையரசி 1965 )
·         110.மூளை நெறஞ்சவங்க ( உத்தம புத்திரன் 1958 )
கருப்பொருள்: சமூகம்
·         111.வீடு நோக்கி ஓடுகின்ற ( பதிபக்தி 1958 )
·         112.வீடு நோக்கி ஓடிவந்த ( பதிபக்தி 1958 )
·         113.ஒரு குறையும் செய்யாம - இருக்கும் ( கண் திறந்தது 1959 )
·         114.உருளுது பொரளுது ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
·         115.ஆம்பிளைக் கூட்டம் ( புதுமைப் பெண் 1959 )
·         116.பாடுபட்டு காத்த நாடு ( விக்கிரமாதித்யன் 1962 )
·         117.தாயில்லை தந்தையில்ல ( ஆளுக்கொருவீடு 1960 )
·         118.சூதாடி மாந்தர்களின் ( உலகம் சிரிக்கிறது 1959 )
·         119.அண்ணாச்சி வந்தாச்சி ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
·         120.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
கருப்பொருள்: அரசியல்
·         121.மனிதரை மனிதர் ( இரும்புத் திரை 1960 )
·         122.எல்லோரும் இந்நாட்டு மன்னரே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
·         123.படிப்பு தேவை அதோடு உழைப்பும் ( சங்கிலித் தேவன் 1960 )
·         124.சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் ( பாண்டித் தேவன் 1959 )
·         125.மனுசனைப் பாத்துட்டு ( கண் திறந்தது 1959 )
·         126.விஷயம் ஒன்று சொல்ல ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
கருப்பொருள்: தத்துவம்
·         127.விதியென்னும் குழந்தை ( தங்கப்பதுமை 1959 )
·         128.ஏனென்று கேட்கவே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
·         129.கல்லால் இதயம் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
·         129.இரை போடும் மனிதருக்கே இரையாகும் ( பதிபக்தி 1958 )
·         130.நீ கேட்டது இன்பம் ( ஆளுக்கொருவீடு 1960 )
·         131.ஈடற்ற பத்தினியின் - ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே ( தங்கப்பதுமை 1959 )
·         132.தர்மமென்பார் - இந்த திண்ணைப் பேச்சு ( பதிபக்தி 1958 )
·         133.உனக்கெது சொந்தம் ( பாசவலை 1956 )
·         134.சூழ்ச்சியிலே - குறுக்கு வழியில் ( மகாதேவி 1957 )
·         135.எல்லோரும் - அது இருந்தால் ( நல்ல தீர்ப்பு 1959 )
·         136.உறங்கையிலே - பொறக்கும் போது ( சக்கரவர்த்தி திருமகள் 1957 )
·         137.இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ( பாசவலை 1956 )
·         138.கருவில் உருவாகி ( செளபாக்கியவதி 1957 )
கருப்பொருள்: பாட்டாளிகளின் குரல்
·         139.செய்யும் தொழிலே தெய்வம் ( ஆளுக்கொரு வீடு 1960 )
·         140.பள்ளம் மேடுள்ள பாதையிலே ( கன்னியின் சபதம் 1958 )
·         141.கொடுமை - சோகச் சுழலிலே ( பாண்டித் தேவன் 1959 )
·         142.சின்னச் சின்ன இழை ( புதையல் 1957 )
·         143.டீ டீ டீ ( கல்யாண பரிசு 1959 )
·         144.எதிரிக்கு எதிரி ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
·         145.என் வீட்டு நாய் ( உலகம் சிரிக்கிறது 1959 )
·         146.நாட்டுக்குப் பொருத்தம் - விவசாயம் ( எங்கள் வீட்டு மகாலெட்சுமி )
·         147.வெங்கிமலை உச்சியிலே ( வாழவைத்த தெய்வம் 1959 )
·         148.என்றும் துன்பமில்லை ( புனர் ஜன்மம் 1961)
·         149.பொங்காத பெருங்கடல் நீதி ( புதுமைப் பெண் 1959 )
·         150.உண்மை ஒரு நாள் ( பாதை தெரியுது பார் 1960 )
·         151.ஏற்றமுன்னா ஏற்றம் ( அரசிளங்குமரி 1958)
·         152.நன்றிகெட்ட மனிதருக்கு ( இரும்புத் திரை 1960 )
·         153.உலகத்தில் இந்த மரணத்தில் - கலங்காதே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
·         154.உண்மையை -இன்ப உலகில் ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
·         155.கரம்சாயா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
·         156.குட்டுகளைச் சொல்லணுமா ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
·         157.தை பொறந்தா வழி பொறக்கும் ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
·         158.சட்டையிலே தேச்சிக்கலாம் -சரக்கு ( சங்கிலித் தேவன் 1960 )
·         159.சும்மா கெடந்த ( நாடோடி மன்னன் 1958 )
கருப்பொருள்: இறைமை
·         160.பார்த்தாயா மானிடனின் லீலையை ( நான் வளர்த்த தங்கை 1958 )
·         161.ஓங்கார ரூபிநீ -அம்பிகையே ( பதிபக்தி 1958 )
·         162.தேவி மனம் போலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
·         163.அறம் காத்த தேவியே ( மஹேஸ்வரி 1955 )
·         164.ஊருக்கெல்லாம் ஒரே சாமி ( ஆளுக்கொரு வீடு 1960 )
·         165.ஓ மாதா பவானி ( செளபாக்கியவதி 1957 )
·         166.ஆனைமுகனே -புள்ளையாரு கோயிலுக்கு ( பாகப்பிரிவினை 1959 )
·         167.கண்டி கதிர்காமம் -எட்டுஜான் குச்சிக்குள்ளே ( அரசிளங்குமரி 1958)
·         168.அம்மா துளசி ( நான் வளர்த்த தங்கை 1958 )
·         169.கங்கை -தில்லையம்பல நடராஜா ( செளபாக்கியவதி 1957 )
கருப்பொருள்: பொத
·         170.தூங்காது கண் தூங்காது ( கற்புக்கரசி 1957 )
·         171.வரும் பகைவர் படைகண்டு ( அம்பிகாபதி 1957 )
·         172.பாசத்தால் எனையீன்ற ( அமுதவல்லி 1959 )
·         173.ஜிலு ஜிலுக்கும் -சிட்டுக் குருவியிவ ( அமுதவல்லி 1959 )
·         174.அள்ளி வீசுங்க காசை ( மஹேஸ்வரி 1955 )
·         175.சவால் சவாலென்று ( கலைவாணன் 1959 )
·         176.அடியார்க்கு -அன்பும் அறிவும் ( ஆளுக்கொரு வீடு 1960 )
·         177.மங்கையருக்கு -அக்காளுக்கு வளைகாப்பு ( கல்யாணப் பரிசு 1959 )
·         178.ஆட்டம் ( பாகப்பிரிவினை 1959 )
·         179.கையில வாங்கினேன் ( இரும்புத்திரை 1960 )
·         180.பிஞ்சு மனதில் -கோடி கோடி ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
·         181.ஓரொண்ணு ஒண்ணு ( மகனே கேள் 1965 )
·         182.ஆறறிவில் ஓரறிவு ( மகனே கேள் 1965 )
·         183.கலைமங்கை உருவம் ( மகனே கேள் 1965 )
·         184.ஆட்டம் பொறந்தது ( மகனே கேள் 1965 )
·         185.மட்டமான பேச்சு ( மகனே கேள் 1965 )
·         186.லால லால- பருவம் வாடுது ( மகனே கேள் 1965 )
·         187.மணவரையில் -சூதாட்டம் ( மகனே கேள் 1965 )
மணி மண்டபம்
தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம்பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைத்துள்ளது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.