பாரதிதாசன்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

பாரதிதாசன்

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

பாரதிதாசன்



பாரதிதாசன்
வாழ்க்கைக்குறிப்பு:
  • இயற் பெயர்    = சுப்புரத்தினம்
  • பெற்றோர்      = கனகசபை, இலட்சுமி அம்மையார்
  • ஊர்            = புதுச்சேரி
  • காலம்          = 29.04.1891-21.04.1964
சிறப்புப்பெயர்கள்:
  • புரட்சிக்கவிஞர்(அறிஞர் அண்ணா)
  • பாவேந்தர்
  • புதுவைக்குயில்
  • பகுத்தறிவு கவிஞர்
  • தமிழ்நாட்டு இரசுல்கம்சதேவ்
  • இயற்க்கை கவிஞர்
நூல்கள்:
  • இசை அமுது
  • பாண்டியன் பரிசு
  • எதிர்பாராத முத்தம்
  • சேரதாண்டவம்
  • அழகின் சிரிப்பு
  • புரட்சிக்கவி
  • குடும்ப விளக்கு
  • இருண்ட வீடு
  • குறிஞ்சித்திட்டு
  • கண்ணகி புரட்சிக்காப்பியம்
  • மணிமேகலை வெண்பா
  • காதல் நினைவுகள்
  • கழைக்கூத்தியின் காதல்
  • தமிழச்சியின் கத்தி
  • இளைஞர் இலக்கியம்
  • சுப்பிரமணியர்துதியமுது
  • சுதந்திரம்
உரைநடை நூல்கள்:
  • திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்
  • சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
நாடகங்கள்:
  • சௌமியன்
  • நல்ல தீர்ப்பு
  • பிசிராந்தையார்(சாகித்ய அகாடமி விருது பெற்றது)
  • சக்திமுற்றப் புலவர்
  • இரணியன் அல்லது இணையற்ற வீரன்
  • சௌமியன்
  • படித்த பெண்கள்
  • இன்பக்கடல்
  • நல்லதீர்ப்பு
  • அமைதி
இதழ்:
  • குயில்
  • முல்லை(முதலில் தொடங்கிய இதழ்)
பொதுவான குறிப்புகள்:
  • பதினாறு வயதில் புதுவை அரசினர்கல்லூரியில்பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்
  • பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம்மை பாரதிதாசன் ஆக ஆக்கிக்கொண்டார்
  • அகவல், எண் சீர்விருத்தம், அறுசீர்விருத்தம் ஆகியவை இவருடைய பாடல்களில்மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார்
  • பாரதியின்வேண்டுகோளுக்கு இணங்க இவர் பாடிய “எங்கெங்குகாணினும்சக்தியடா’ என்ற பாடலைக் கேட்ட அவர், அக்கவிதையைத்தாமே, “ஸ்ரீ சுப்பிரமணியபாரதியின்கவிதாமண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம்எழுதியது” எனச்சுதேசமித்திரன்இதழுக்குஅனுப்பினார்
  • தொடக்க கல்வி கற்றது = திருப்புளி சாமியாரிடம்
  • இவர் தமிழ் பயின்றது = புலவர் பு.அ.பெரியசாமியிடம்
  • இவரின் கவித்திறன் கண்டு “நாவலர் சோமசுந்தரபாரதியார்” தலைமையில் அறிஞர் அண்ணா அவர்கள் இவருக்கு “புரட்சிக்கவி” என்ற பட்டத்தையும்25000 ரூபாய் நன்கொடையும் அளித்தார்
  • வ.ரா.வின்அழைப்பின் பேரில் “இராமனுஜர்” என்னும் படத்திற்கு  திரைப்படப்பாடல் எழுதினார்
சிறப்பு:
  • புதுமைபித்தன் = அறிவுக்கோயிலைக் கட்டி அதில் நம்மைக்குடியேற்றவிரும்புகின்றபேரறிஞன்
  • கு.ப.இராசகோபாலன் = பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி
  • சிதம்பரநாதசெட்டியார் = அவர் தம் பாடல்களைப்படிக்கின்றஅந்நியனும்தமிழனாகி விடுவான்
  • வி.ஆர்.எம்.செட்டியார் = புரட்சிக்கவிபாரதிதாசன், புதிய கவிதையை சிருஷ்டி செய்கிறார்; இயற்கையாகவே செய்கிறார்; தமிழ் மொழியில் புதியவளைவும், நெளிவும்மெருகும் ஏற்றுகிறார்; அவர் இசை வெறியில்கவிதைக்கனலுடன்பாடும்போது நாம் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் சலிப்பின்றிக் கேட்டு இன்புறலாம். இது உண்மை! மறுக்க  முடியாத உண்மை
  • திரு.வி.க = குயிலின்பாடலும் மயிலின் ஆடலும்வண்டின்யாழும்அருவியின்முழவும் இனிக்கும், பாரதிதாசன்பாட்டும் இனிக்கும்
  • சுரதா = தடையேதும் இல்லை இவர் நடையில், வாழைத்தண்டுக்கோதடுக்கின்றகனுக்களுண்டு
  • 1990ஆம் ஆண்டு தமிழக அரசு இவரின் நூல்களை எல்லாம் நாட்டுடைமைஆக்கியது
மேற்கோள்:
  • நீலவான்ஆடைக்குள் உடல் மறைத்து
    நிலாவென்றுகாட்டுகின்றாய்ஒளிமுகத்தை
    கோலம் முழுவதும் காட்டிவிட்டால்காதற்
    கொள்ளையிலேஇவ்உலகம்சாமோ?
  • எல்லார்க்கும் எல்லாம்  என்று இருப்பதான
    இடம்நோக்கிநகர்கிறதுஇந்தவையம்
  • கல்லாரைக்காணுங்கால்கல்விநல்காக்
    கசடர்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்
  • தமிழுக்குஅமுதென்று பேர் – இன்பத்
    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
  • தமிழைப்பழித்தவனைத் தாய் தடுத்தாலும்விடாதே
  • எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
  • நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்