தமிழின்தொண்மை

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

தமிழின்தொண்மை

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)

தமிழின்தொண்மை


தமிழின்தொண்மை
உயர்தனிச்செம்மொழி
பாவலரேறுபெருஞ்சித்திரனார்:
  • வீறுடைசெம்மொழிதமிழ்மொழி உலகம்
    வேரூன்றிய நாள்முதல்உயிர்மொழி”
என்று தமிழின்பெருமையைப்போற்றுகிறார்பெருஞ்சித்திரனார். 
செம்மொழியின் இலக்கணம்:
  • திருந்தியபண்பும், சீர்த்தநாகரிகமும் பொருந்திய தூய்மொழிதமிழ்ச்செம்மொழியாம்” என்று பரிதிமாற்கலைஞர்செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.
பாவாணர் கூற்று:
  • தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என வரும் 16 செவ்வியல்தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி” என்பார் பாவாணர்.
முஸ்தபாவின்செம்மொழிதகுதிப்பாடுகள்:
  • தொன்மை, பிறமொழித்தாக்கமின்மை, தாய்மை, தனித்தன்மை, இலக்கியவளமும்இலக்கியச் சிறப்பும், பொதுமைப் பண்பு, நடுவுநிலைமை, பண்பாடு கலை பட்டறிவு வெளிப்பாடு, உயர்சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை வெளிபாடு, மொழிக் கோட்பாடு எனப்11 தகுதிகளை அறிவியல் தமிழறிஞர்முஸ்தபாவரையறுத்துள்ளார்.
தொன்மை:
  • முதல் மாந்தன்தோன்றிய இடம் குமரிக் கண்டம். அவன் பேசிய மொழி தமிழ் மொழியேஎன்பர்.
  • உலகம் தோன்றியபோதேதோன்றியதமிழை, அதன் தொன்மையைக் கருத்து “என்றுமுளதென்தமிழ்” என்பார் கம்பர்.
பிறமொழித்தாக்கமின்மை:
  • பிறமொழி சொற்களை நீக்கினால் பல மொழிகள்இயங்காது.
  • அனால், தமிழ் ஒன்றே பிறமொழிச் சொற்களை நீக்கினாலும்இனிதின்இயங்கவல்லது.
தாய்மை:
  • தமிழ் மொழியானது திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் முதலிய மொழிகளுக்குத்தாய்மொழியாகத்திகழ்கிறது.
  • தமிழ் மொழி பிராகுயி முதலான வடபுலமொழிகளுக்கும்தாய்மொழியாகவிளங்குகிறது என்பார் கால்டுவெல்.
  • 1090 மொழிகளுக்குவேர்ச்சொல்லையும், 109 மொழிகளுக்குஉறவுப்பெயர்களையும்தந்துள்ளது தமிழ்.
தனித்தன்மை:
  • இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும்பிரிவுகளைத் கொண்டது தமிழ்.
  • தமிழர் அகம், புரம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்துள்ளனர்.
  • திருக்குறள், மாந்தர் இனத்திற்கேவாழ்வியல்நெறிமுறைகளைவகுத்துள்ளது.
இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு:
  • உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.
  • இவற்றின் மொத்த அடிகள் = 26350.
  • அக்காலத்தேஇவ்வளவிற்கு “விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகின் வேறு எம்மொழியிலும் இல்லை” என்பது உலக இலக்கியங்களைஆய்ந்த “கமில்சுவலபில்” என்னும் செக் நாடு மொழியியல்அறிஞரின் முடிபு.
  • மாக்சுமுல்லர் என்னும் மொழி நூலறிஞரோதமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், அது தனக்கே உரிய இலக்கியச்செல்வங்களைப்பெற்றிருக்கும்மொழியென்றும் பாராட்டி இருக்கின்றார்.
  • சங்க இலக்கியங்கள் “மக்கள் இலக்கியங்கள்” எனப்படும்.
  • தமிழ் இலக்கணம் படிக்கப்படிக்கச்விருப்பதை உண்டாக்குவது” என்பார் கெல்லட்.
  • நமக்கு கிடைத்த இலக்கண நூல்களுள் மிகவும் பழமையானது தொல்காப்பியம்.
  • தொல்காபிய்யம் மூன்று இலக்கணங்களை கூறியுள்ளார். அவரின் ஆசிரியர் அகத்தியர் ஐந்து இலக்கணங்களை கூறியுள்ளார்.
பொதுமைப் பண்பு:
  • தமிழர் தமக்கெனவாழாமல்பிறர்க்கெனவாழ்ந்தவர்கள்.
  • செம்புலப்பெயல்நீர்போலஅன்புள்ளம்கொண்டவர்கள்.
நடுவுநிலைமை:
  • சங்க இலக்கியங்கள் இனம், மொழி, மதம் கடந்தவை.
  • இயற்கையோடுஇணைந்தவை.
  • மக்கள் சிறப்புடன் வாழ ஏற்ற கருத்துக்களைமொழிபவை.
பண்பாடு, கலை பட்டறிவு வெளிப்பாடு:
  • சங்கப்படைப்புகள், “பகுத்துண்டுபல்லுயிர் ஓம்புதல், யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், பிறன்மனை நோக்காப் பேராண்மை” முதலிய பண்பாட்டுநெறிமுறைகளையும்வெளிப்படுத்திகிறது.
உயர் சிந்தனை:
  • யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என உலக மக்களைஒன்றினைந்துஉறவுகளாக்கியஉயர்சிந்தனை மிக்கது புறநானூறு.
  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனத் திருக்குறள் உலகுக்கு எடுத்துரைக்கிறது.
கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு:
  • தமிழ்ச்சான்றோர்மொழியை, “இயல், இசை, நாடகம்” எனப் பிரித்து வளமடையச் செய்தனர்.
  • எளிய குடிமகனையும்குடிமகளையும்காப்பியத்தலைவர்களாக்கிக் காப்பியம் படைத்தனர்.
மொழிக் கோட்பாடு:
  • இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்கவழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது” என்பார் முனைவர் எமினோ.
  • ஒருமொழிக்கு35 ஒலிகள்இருந்தாலே போதும் என்பர். ஆனால் தமிழோ500 ஒலிகளைக்கொண்டுள்ளது.
செம்மொழி:
  • இவ்வருஞ்சிறப்புமிக்கதமிழைச் “செம்மொழி” என அறிவித்தல் வேண்டும் என்ற முயற்சி 1901இல் தொடங்கி 2004வரை தொடர்ந்தது.
  • நடுவண் அரசு 2004ஆம் ஆண்டு அக்டோபரில்தமிழைச்செம்மொழியாக அறிவித்தது.