தமிழின்தொண்மை
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)
தமிழின்தொண்மை

தமிழின்தொண்மை

தமிழின்தொண்மை
உயர்தனிச்செம்மொழி
பாவலரேறுபெருஞ்சித்திரனார்:
- “வீறுடைசெம்மொழிதமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல்உயிர்மொழி”
என்று தமிழின்பெருமையைப்போற்றுகிறார்பெருஞ்சித்திரனார்.
செம்மொழியின் இலக்கணம்:
- “திருந்தியபண்பும், சீர்த்தநாகரிகமும்
பொருந்திய தூய்மொழிதமிழ்ச்செம்மொழியாம்” என்று பரிதிமாற்கலைஞர்செம்மொழிக்கு
இலக்கணம் வகுத்துள்ளார்.
பாவாணர் கூற்று:
- “தொன்மை,
முன்மை,
நுண்மை,
திண்மை,
எண்மை,
ஒண்மை,
இனிமை,
தனிமை,
இளமை,
வளமை,
தாய்மை,
தூய்மை,
மும்மை,
செம்மை,
இயன்மை,
வியன்மை என வரும் 16 செவ்வியல்தன்மைகளைக்
கொண்டது செம்மொழி;
அதுவே நம்மொழி” என்பார் பாவாணர்.
முஸ்தபாவின்செம்மொழிதகுதிப்பாடுகள்:
- தொன்மை, பிறமொழித்தாக்கமின்மை, தாய்மை, தனித்தன்மை,
இலக்கியவளமும்இலக்கியச் சிறப்பும், பொதுமைப்
பண்பு,
நடுவுநிலைமை,
பண்பாடு கலை பட்டறிவு வெளிப்பாடு, உயர்சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை வெளிபாடு, மொழிக்
கோட்பாடு எனப்11
தகுதிகளை அறிவியல் தமிழறிஞர்முஸ்தபாவரையறுத்துள்ளார்.
தொன்மை:
- முதல்
மாந்தன்தோன்றிய இடம் குமரிக் கண்டம். அவன் பேசிய மொழி தமிழ் மொழியேஎன்பர்.
- உலகம்
தோன்றியபோதேதோன்றியதமிழை, அதன்
தொன்மையைக் கருத்து “என்றுமுளதென்தமிழ்” என்பார் கம்பர்.
பிறமொழித்தாக்கமின்மை:
- பிறமொழி
சொற்களை நீக்கினால் பல மொழிகள்இயங்காது.
- அனால், தமிழ் ஒன்றே பிறமொழிச் சொற்களை நீக்கினாலும்இனிதின்இயங்கவல்லது.
தாய்மை:
- தமிழ்
மொழியானது திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம்,
துளுவம் முதலிய மொழிகளுக்குத்தாய்மொழியாகத்திகழ்கிறது.
- தமிழ்
மொழி பிராகுயி முதலான வடபுலமொழிகளுக்கும்தாய்மொழியாகவிளங்குகிறது என்பார்
கால்டுவெல்.
- 1090 மொழிகளுக்குவேர்ச்சொல்லையும், 109 மொழிகளுக்குஉறவுப்பெயர்களையும்தந்துள்ளது
தமிழ்.
தனித்தன்மை:
- இயல், இசை,
நாடகம் என்னும் முப்பெரும்பிரிவுகளைத் கொண்டது தமிழ்.
- தமிழர்
அகம்,
புரம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்துள்ளனர்.
- திருக்குறள், மாந்தர் இனத்திற்கேவாழ்வியல்நெறிமுறைகளைவகுத்துள்ளது.
இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு:
- உலக
இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.
- இவற்றின்
மொத்த அடிகள் = 26350.
- அக்காலத்தேஇவ்வளவிற்கு
“விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகின்
வேறு எம்மொழியிலும் இல்லை” என்பது உலக இலக்கியங்களைஆய்ந்த “கமில்சுவலபில்”
என்னும் செக் நாடு மொழியியல்அறிஞரின் முடிபு.
- மாக்சுமுல்லர்
என்னும் மொழி நூலறிஞரோதமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், அது தனக்கே உரிய இலக்கியச்செல்வங்களைப்பெற்றிருக்கும்மொழியென்றும்
பாராட்டி இருக்கின்றார்.
- சங்க
இலக்கியங்கள் “மக்கள் இலக்கியங்கள்” எனப்படும்.
- “தமிழ் இலக்கணம் படிக்கப்படிக்கச்விருப்பதை உண்டாக்குவது” என்பார்
கெல்லட்.
- நமக்கு
கிடைத்த இலக்கண நூல்களுள் மிகவும் பழமையானது தொல்காப்பியம்.
- தொல்காபிய்யம்
மூன்று இலக்கணங்களை கூறியுள்ளார். அவரின் ஆசிரியர் அகத்தியர் ஐந்து
இலக்கணங்களை கூறியுள்ளார்.
பொதுமைப் பண்பு:
- தமிழர்
தமக்கெனவாழாமல்பிறர்க்கெனவாழ்ந்தவர்கள்.
- செம்புலப்பெயல்நீர்போலஅன்புள்ளம்கொண்டவர்கள்.
நடுவுநிலைமை:
- சங்க
இலக்கியங்கள் இனம்,
மொழி,
மதம் கடந்தவை.
- இயற்கையோடுஇணைந்தவை.
- மக்கள்
சிறப்புடன் வாழ ஏற்ற கருத்துக்களைமொழிபவை.
பண்பாடு,
கலை பட்டறிவு வெளிப்பாடு:
- சங்கப்படைப்புகள், “பகுத்துண்டுபல்லுயிர் ஓம்புதல், யான்
பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், பிறன்மனை
நோக்காப் பேராண்மை” முதலிய பண்பாட்டுநெறிமுறைகளையும்வெளிப்படுத்திகிறது.
உயர் சிந்தனை:
- “யாதும் ஊரே,
யாவரும் கேளிர்” என உலக மக்களைஒன்றினைந்துஉறவுகளாக்கியஉயர்சிந்தனை
மிக்கது புறநானூறு.
- “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனத் திருக்குறள் உலகுக்கு
எடுத்துரைக்கிறது.
கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு:
- தமிழ்ச்சான்றோர்மொழியை, “இயல்,
இசை,
நாடகம்” எனப் பிரித்து வளமடையச் செய்தனர்.
- எளிய
குடிமகனையும்குடிமகளையும்காப்பியத்தலைவர்களாக்கிக் காப்பியம் படைத்தனர்.
மொழிக் கோட்பாடு:
- “இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்கவழிமுறைகளைத்
தொல்காப்பியம் கூறுகின்றது” என்பார் முனைவர் எமினோ.
- ஒருமொழிக்கு35 ஒலிகள்இருந்தாலே போதும் என்பர். ஆனால் தமிழோ500 ஒலிகளைக்கொண்டுள்ளது.
செம்மொழி:
- இவ்வருஞ்சிறப்புமிக்கதமிழைச்
“செம்மொழி” என அறிவித்தல் வேண்டும் என்ற முயற்சி 1901இல் தொடங்கி 2004வரை
தொடர்ந்தது.
- நடுவண்
அரசு 2004ஆம் ஆண்டு அக்டோபரில்தமிழைச்செம்மொழியாக அறிவித்தது.