இசைக்கலை
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)
இசைக்கலை

இசைக்கலை

இசைக்கலை
- இசை
என்னும் சொல் “இயை” என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது
- இசையானது
“கந்தருவ வேதம்” என்று அழைக்கப்படும் சிறப்பினை உடையது
- இன்னிசை, ஒத்திசை,
தொகுப்பிசை என மூன்றாகப்பிரிப்பர்
- ஒற்றைச்சுரங்கள்இனிமையாகச்சேர்வது
இன்னிசை. இந்திய இசை இன்னிசை வகையைச்சேர்ந்தது
- ஒத்த
சுரங்களின் சுர அடுக்குகள்தம்முள்ஒத்திசைப்பது “ஒத்திசை” எனப்படும்.
மேலைநாட்டு இசை இந்த வகையைச்சார்ந்ததாகும்
- ஒவ்வோர்சுரத்திற்கும்வேறோர்இணைச்சுரம்சேர்க்கப்பட்டுஇரண்டும்
ஒன்றாக இசைப்பதுதொகுப்பிசை ஆகும்
- இசையின்
ஒலிக்குறிப்பு சுரம் எனப்படும்
- சுரம்
என்பதற்கு இனிமை உடையது என்று பொருள்
- இசைத்தல்
என்பதும் பொருள்
- இசைத்தல்
என்பதற்கு பொருந்துதல், ஒன்றாதல்
என்று பொருள்
- “இசையே புணர்ச்சி” என்பது தொல்க்காப்பியஉரியியல்நூற்பா
- இந்தியாவில்
இந்துஸ்தானி இசை,
கருநாடக இசை என்ற இரு பிரிவுகள் உள்ளன
சுரங்களின்பெயர்கள்:
பழந்தமிழ் நூல்கள்
|
சுரங்களின்பெயர்கள்
|
சுரக் குறியீடு
|
குரல்
|
சட்சம்
|
ச
|
துத்தம்
|
ரிஷபம்
|
ரி
|
கைக்கிளை
|
காந்தாரம்
|
க
|
உழை
|
மத்தியமம்
|
ம
|
இளி
|
பஞ்சமம்
|
ப
|
விளரி
|
தைவதம்
|
த
|
தாரம்
|
நிஷதம்
|
நி
|
- இவை
ஏழு சுரங்கள்எனப்படும்
- ஏழு
சுரங்களும்ஒன்றைவிட மற்றது வலியது என்ற வரிசையில் ஒலிப்பதுஆரோசை (ஆரோகணம்)
ஆகும்
- ஏழு
சுரங்களும் இறங்கு வரிசையில் ஒலிப்பதுஅமரோசை (அவரோகணம்) ஆகும்
- சுரம்
என்பதற்கு உரிய தமிழ்ச்சொல் “நரம்பு” என்பதாகும்
- சுரங்கள்சேர்ந்தது
“ராகம்” ஆகும்
- ராகம்
என்பதற்கு உரிய தமிழ்ச்சொல் “பண்” என்பதாகும்
- இந்திய
இசை ராகத்தை அடிப்படையாக கொண்டது
- பூபாளம், முகாரி,
நீலாம்பரி போன்ற பல ராகங்கள் உண்டு
- விடியலில்
பாட வேண்டிய ராகம்கேதாரம், தன்னியாசி
- முற்பகலில்பாடவேண்டியராகம்சாவேரி, தேவமனோகரி
- நண்பகலில்பாடவேண்டியராகம்
ஸ்ரீராகம்,
மத்தியமாவதி
- பிற்பகலில்பாடவேண்டியராகம்முகாரி, பேகடை
- மாலையில்
பாடவேண்டியராகம் கல்யாணி, வசந்தம்
- எல்லா
நேரங்களிலும்பாடப்படும்ராகம்பைரவி, சங்கராபரணம், காம்போதி,
ஆரபி
- தேவாரப்பாடல்களின்இசையைப்பகற்பண், இராப்பண்,
பொதுப்பண் என மூன்றாகப்பிரித்துள்ளனர்
இசைக்கருவிகள்:
- உலகில்
இசைக்கப்படும் எல்லா இசைக் கருவிகளும் அடிப்படையான இசைக்கருவிகள் எல்லாம்
கிழக்கு நாடுகளில் தோன்றின
- தமிழ்நாட்டில்
இசைக்கருவிகளை நான்கு வகையாகப்பிரிப்பர்
- 1. தோல்கருவி2.
துளைக்கருவி 3. நரம்புக்கருவி4. கஞ்சக்கருவி
- கஞ்சக்
கருவி என்பது உலோகக்கருவிகளைக்குறிக்கும்
- தோல்
கருவிகள் = பேரிகை,
படகம்,
இடுக்கை,
உடுக்கை,
மத்தளம்,
சல்லி,
கரடி
- துளைக்
கருவிகள் = வங்கியம்,
கொம்பு,
தாரை,
குழல்,
காளம்,
சங்கு
- நரம்புக்
கருவிகள் = யாழ,
வீணை,
கின்னரி
- கஞ்சக்
கருவிகள் = கைமணி,
தாளம்,
கஞ்சதாளம்,
கொண்டி
- பஞ்சமரபு
என்ற பண்டைய இசைத்தமிழ் நூல் பாடகர் பாடுவது மிடற்றுக் கருவி எனக்கூறுகிறது
- இன்று
மேலைநாட்டுஇசைக்கருவிகளும்பயன்படுத்தப்படுகின்றன
- முதல்
சங்கத்தில்பெருநாரை,
பெருகுருகு (முதுநாரை, முதுகுருகு)
என்ற நூல்கள் இருந்தன
- பெருநாரை
என்பது இசைப்பற்றிய நூல், நரம்பு
– நார் – நாரை
- பெருகுருகு
என்பது துணைக்கருவிகள் பற்றிய இசைநூல்
- இடை
சங்கத்தில்பேரிசை,
சிற்றிசை என்ற இசைநூல்கள் இருந்தன
- கடைச்சங்கத்தில்இசைமரபு, இசை நுணுக்கம், ஐந்தொகை
அல்லது பஞ்சமரபு என்னும் இசை நூல்கள் இருந்தன
- தொல்க்காப்பியம்
தொடங்கி சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள்,
நிகண்டுகள்,
சைவ,
வைணவ நூல்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், உரை
நூல்கள் என எல்லாவற்றிலும் இசைத்தமிழ் குறித்த, தமிழ்
இசை குறித்த பல செய்திகள் இடம் பெற்றுள்ளன
- அடியார்க்குநல்லார்சிலப்பதிகாரஉரையில்
பஞ்ச பாரதீயம்,
பரதசேனாபதீயம், மதிவாணர்நாடகத்தமிழ், இசைநுணுக்கம், பஞ்சமரபு, தாளவகை ஒத்து என்ற இசை இலக்கண நூல்களைக்குறிப்பிட்டுள்ளனர்
- ஐந்து
தினைக்கும் உரிய “யாழ” குறித்து இலக்கண நூல்கள் கூறுகின்றன
தமிழிசை வரலாறு:
- ஒவ்வொரு
இனத்திற்கும்உரியதாய் ஓர் இசைமரபு இருக்கும். தமிழுக்கும் உரிய இசை மரபு
தமிழிசை ஆகும்
- “இசையோடுசிவணியநரம்பின் மறைய என்மனார் புலவர்” என்கிறார்
தொல்காப்பியர்
- பரிபாடல்
தூக்கு,
வண்ணம் குறித்துக்கூறுகிறது
- கலித்தொகையின்தாழிசைஇசைப்பாட்டே
- பாணரும்கூத்தரும்
இசை வளர்த்த கலைஞர்களேஆவர்
- சிலப்பதிகாரத்தின்அரங்கேற்றுக்காதை, கானல்வரி,
ஆய்ச்சியர் குரவை, வேட்டுவரி, குன்றக்குரவைபகுதிகள்இசைப்பற்றியன
- களப்பிரர்
காலத்தில் காரைக்கால் அம்மையாரின்திருவண்ணத்தந்தாதி போன்ற
பதிகங்கள்இசையுடன்பாடப்பட்டன
- பல்லவர்
காலத்தில் மூவர்முதலிகள் தமிழ் இசையை நன்கு வளர்த்தனர்
- நம்மாழ்வாரின்
திருவாய்மொழி இசையை மேலும் வளர்த்தது
- கொங்குவேள்மாக்கதையாகிய
பெருங்கதை யாழிசை குறித்த பல செய்திகளைக்கூறுகிறது. உதயணன்இசைப்பாடி வென்று
சுரமஞ்சரியைமணக்கிறான்
- முதலாம்
மகேந்திரவர்மனின்குடிமியான்மலைக் கல்வெட்டு இசைக் கல்வெட்டாகும்
- பெரியபுராணத்தில்ஆனாயநாயனார்புராணத்தில்குழலிசை
பற்றியும் திருநீலகண்டஅனாரின்புராணத்தில்யாழ்த்திறம் பற்றியும் குறிப்புகள்
உள்ளன
- திருவிளையாடல்
புராணங்களில் அமைந்துள்ள சாதாரிபாடின திருவிளையாடல் விறகு விற்ற
திருவிளையாடல் ஆகிய இசை பற்றியன
- அருணகிரிநாதரின்திருப்புகழ்ப்பாடல்கள்தாளக்கலைக்குவேதமாகத்திகழ்கிறது
- தமிழிசையும்ஆரியசங்கீதமும்
கலந்து கர்நாடக சங்கீதம் தோன்றியது என்பர்
- பண்டைய
தமிழிசைகருநாடகசங்கீதமாகவழங்குகிறது என்று தண்டபாணி தேசிகர் போன்றோர்
கருதுகின்றனர்
- ராகத்தைமுதன்மையாககக்
கொண்டது சங்கீதங்கள்
- சங்கீதத்தோடுபாட்டும்
இணைந்தது சாகித்தியங்கள் ஆகும்
- சீர்காழியில்
பிறந்த முத்துத்தாண்டவர், மாரிமுத்துப்பிள்ளை, அருணாச்சலக்கவிராயர் ஆகிய மூவரும் தமிழ் பாடி தமிழிசைவளர்த்தனர்
- இம்மொவரையும்
“தமிழ் மூவர்” என்றும் “சீர்காழி மூவர்” என்றும் “கருநாடக சங்கீத ஆதி
மும்மூர்த்திகள்” என்றும் போற்றுவர்
- இம்மூவரே
பல்லவி – அனுபல்லவி – சரணம் என்ற அமைப்பில் பாடும் பாடல்
மரபைத்தோற்றுவித்தனர்
- இம்மரபைப்
பின் வந்த சங்கீத மும்மூர்த்திகள்பின்பற்றினர்
- நாயக்கர்
காலத்தில் தியாகையர்,
சியாமாசாஸ்திரிகள், முத்துசாமி
தீட்சிதர் மூவரும் கீர்த்தனைகள்பாடினர்
- ஆபிரகாம்
பண்டிதர் “கருணாமிர்த சாகரம்” என்ற நூலை இயற்றினார்
- இலங்கையில்
பிறந்த விபுலானந்த அடிகள் “யாழ் நூல்” இயற்றினார். வழக்கொழிந்து போன யாழ
குறித்து ஆராய்ந்ததோடு “யாழ்” கருவியை செய்து அதனை மீட்டியும்காட்டினார்
- அண்ணாமலை
செட்டியார்தமிழிசைச் சங்கம் வைத்துத்தமிழிசையைக்காத்தார்
- தண்டபாணி
தேசிகர்,
சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் தமிழ் இசைக்குப்பாடுபட்டனர்