ஓவியக்கலை
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)
ஓவியக்கலை

ஓவியக்கலை

ஓவியக்கலை
ஓவியம்:
- எல்லைகளையெல்லாம்
கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க
வைக்கும் விந்தை மொழி ஓவியம்.
- காண்பவரைக்
கவர்ந்திழுத்து உள்ளங்களைத்தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியக்கலை.
கோட்டோவியங்கள்:
- சுமார்
2000
ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள்
மலைக்குகைகளிலும்பாறைகளிலும்கோட்டோவியங்கள்வரைந்தனர்.
- தமிழகத்தில்25க்கும் மேற்பட்ட இடங்களில் (மான், போர்
செய்தல்,
விலங்கு வேட்டை ஆகியவற்றை குறிக்கும்) குகை ஓவியங்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்ணெழுத்து:
- தமிழ்
நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.
- தாம்
வரைந்தஓவியங்களை முதலில் “கண்ணெழுத்து” என்றே வழங்கினர்.
எழுத்து:
- எழுத்து
என்பதற்கு ஓவியம் என்றும் பொருள் உண்டு என பரிபாடலும், குறுந்தொகையும்கூறுகின்றன.
கோட்டோவியங்கள்:
- ஓவியம்
வரைவதற்குநேர்கோடு,
கோணக்கோடு,
வளைகோடு முதலியன அடிப்படை.
- இவ்வாறு
வரையப்படுபவை “கோட்டோவியங்கள்” எனப்படும்.
நடுகல் வணக்கம்:
- தொல்காப்பியம்
நடு கல் வணக்கம் பற்றிக்கூறுகிறது.
- நடுகல்லில்
போரில் வீரமரணம்எய்தியவீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியவற்றைப் பொரிக்கும் பழக்கம் இருந்தது.
ஓவியக்கலையின்வேறுபெயர்கள்:
ஓவ, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்
செய்தி
|
ஓவியக்கலைஞனின் வேறு பெயர்கள்:
ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள்வினைஞன், சித்திரகாரர், வித்தகவினைஞன், வித்தகர், கிளவி
வல்லோன்
|
நச்சினார்கினியர் இலக்கணம்:
- நச்சினார்க்கினியர்
தம் உரையில்ஓவியருக்கு, “நோக்கினார்கண்ணிடத்தே
தம் தொழில் நிறுத்துவோர்” என இலக்கணம் வகுத்துள்ளார்.
ஓவியக்குழுக்கள்:
- ஓவிய
கலைஞர் குழுவை “ஓவிய மாக்கள்” என்று அழைத்தனர்.
- ஆண்
ஓவியர் = சித்திராங்கதன்
- பெண்
ஓவியர் = சித்திரசேனா
சிலப்பதிகாரம்:
- ஆடல்
மகள் மாதவி,
“ஓவியச்செந்நூல் உரை
நூற்கிடக்கையும்கற்றுத்துறைபோகப்பொற்கொடிமடந்தையாகஇருந்தனள்” எனச் சிலம்பு
பகிர்கிறது.
வரைகருவிகள்:
- வண்ணம்
தீட்டும் கோல் தூரிகை,
துகிலிகை,
வட்டிகைஎனப்பட்டது.
- வண்ணங்கள்குழப்பும்பலகைக்கு
“வட்டிகைப் பலகை” எனப் பெயர்.
வரைவிடங்கள்:
- ஓவியம்
வரையப்பட்ட இடங்கள் = சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதொளில்
அம்பலம்
- இறை
நடனம் புரிவதற்கே “சித்திர சபை” ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர்.
புறநானூறு:
“ஓவத்தனையஇடனுடை வனப்பு”
|
- இவ்வாறு
வீட்டின் அழகை ஓவியத்திற்குஒப்ப வைத்துக் கவிஞர் போற்றுகிறார்.
ஓவியஎழினி:
- நாடகமேடைகளில்
பல வண்ணங்களில்கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்டதிரைச்சீலைகள்தொங்குகினவற்றை
“ஓவியஎழினி” கொண்டு அறிகிறோம்.
புனையா ஓவியம்:
- வண்ணம்
கலக்காமல்கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதைப்புனையா ஓவியம் என்பர்.
- இன்றும், இது மென்கோட்டுஓவியமாக நடைமுறையில் உள்ளது.
நெடுநல்வாடை:
- ஆடு
முதலான 12
இராசிகளையும், விண்மீன்களையும்வரைந்த
செய்தி,
நெடுநல்வாடை கூறுகிறது.
தமிழரின்ஓவிய மரபு:
- ஓவியங்களில்
“நிற்றல்,
இருத்தல்,
கிடத்தல்” ஆகிய மனித இயல்புகளையும்
- “வீரம்,
சாந்தம்,
சினம்,
வியப்பு,
உவகை” ஆகிய மெய்ப்பாடுகளையும்
- “உத்தமம்,
மத்திமம்,
அதமம்,
தசதாளம்,
நவதாளம்,
பஞ்சதாளம் முதலிய அளவுகளையும் வலியுறுத்துவது தமிழருக்கே உரிய
ஓவியமரபுகளாகவிளங்குகின்றன.
மகேந்திரவர்மப்பல்லவன்:
- சங்கக்
காலத்தில் செழித்திருந்தஓவியக்கலை இடைக்காலத்தில் சிதைந்து மறைந்துபோகத்
தொடங்கியது.
- மறைந்து
கொண்டிருந்த ஓவியக்கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள்பல்லவர்கள்.
- 7ஆம் நூற்றாண்டில்தமிழகத்தைஆண்ட முதலாம் மகேந்திரவர்மப்பல்லவன்
சிறந்த ஓவியன்.
- கல்வெட்டுகள்இவனைச்
“சித்திரகாரப்புலி” எனப்புகழ்கின்றன.
- “தட்சிணசித்திரம்” என்னும் ஓவிய நூலுக்கு இம்மன்னன் உரை
எழுதியுள்ளான்.
சித்தன்னவாசல் – ஓவியக் கருவூலம்:
- திருநந்திக்கரையில்சேரர்
கால ஓவியங்கள் கிடைத்துள்ளன.
- புதுக்கோட்டைக்கு
அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்கோவில் ஓவியங்கள் ஓவியக்கருவூலமாக வைத்து
போற்ற தக்கது.
- கி.பி.9ஆம் நூற்றாண்டில் “அவனிபசேகரஸ்ரீவல்லபன்” என்ற பாண்டிய மன்னன்
காலத்தில்,
மதுரை ஆசிரியர் “இளம்கௌதமன்” இவ்வோவியங்களை வரைந்தார் என
கல்வெட்டுகள்கூறுகிறது.
சோழர் கால ஓவியங்கள்:
- சோழர்காலவனப்புமிக்கஓவியங்களைத்தஞ்சைப்பெரியகோவிலில்
காணலாம்.
- அதில்
கவின்மிகுகயிலைகாட்சி உள்ளது.