ஓவியக்கலை

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

ஓவியக்கலை

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)

ஓவியக்கலை


ஓவியக்கலை
ஓவியம்:
  • எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம்.
  • காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத்தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியக்கலை.
கோட்டோவியங்கள்:
  • சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் மலைக்குகைகளிலும்பாறைகளிலும்கோட்டோவியங்கள்வரைந்தனர்.
  • தமிழகத்தில்25க்கும் மேற்பட்ட இடங்களில் (மான், போர் செய்தல், விலங்கு வேட்டை ஆகியவற்றை குறிக்கும்) குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்ணெழுத்து:
  • தமிழ் நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.
  • தாம் வரைந்தஓவியங்களை முதலில் “கண்ணெழுத்து” என்றே வழங்கினர்.
எழுத்து:
  • எழுத்து என்பதற்கு ஓவியம் என்றும் பொருள் உண்டு என பரிபாடலும், குறுந்தொகையும்கூறுகின்றன.
கோட்டோவியங்கள்:
  • ஓவியம் வரைவதற்குநேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படை.
  • இவ்வாறு வரையப்படுபவை “கோட்டோவியங்கள்” எனப்படும்.
நடுகல் வணக்கம்:
  • தொல்காப்பியம் நடு கல் வணக்கம் பற்றிக்கூறுகிறது.
  • நடுகல்லில் போரில் வீரமரணம்எய்தியவீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியவற்றைப் பொரிக்கும் பழக்கம் இருந்தது.
ஓவியக்கலையின்வேறுபெயர்கள்:
ஓவ, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி
ஓவியக்கலைஞனின் வேறு பெயர்கள்:
ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள்வினைஞன், சித்திரகாரர், வித்தகவினைஞன், வித்தகர், கிளவி வல்லோன்
நச்சினார்கினியர் இலக்கணம்:
  • நச்சினார்க்கினியர் தம் உரையில்ஓவியருக்கு, “நோக்கினார்கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” என இலக்கணம் வகுத்துள்ளார்.
ஓவியக்குழுக்கள்:
  • ஓவிய கலைஞர் குழுவை “ஓவிய மாக்கள்” என்று அழைத்தனர்.
  • ஆண் ஓவியர் = சித்திராங்கதன்
  • பெண் ஓவியர் = சித்திரசேனா
சிலப்பதிகாரம்:
  • ஆடல் மகள் மாதவி, “ஓவியச்செந்நூல் உரை நூற்கிடக்கையும்கற்றுத்துறைபோகப்பொற்கொடிமடந்தையாகஇருந்தனள்” எனச் சிலம்பு பகிர்கிறது.
வரைகருவிகள்:
  • வண்ணம் தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகைஎனப்பட்டது.
  • வண்ணங்கள்குழப்பும்பலகைக்கு “வட்டிகைப் பலகை” எனப் பெயர்.
வரைவிடங்கள்:
  • ஓவியம் வரையப்பட்ட இடங்கள் = சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதொளில் அம்பலம்
  • இறை நடனம் புரிவதற்கே “சித்திர சபை” ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர்.
புறநானூறு:
ஓவத்தனையஇடனுடை வனப்பு”
  • புறநானூறு
  • இவ்வாறு வீட்டின் அழகை ஓவியத்திற்குஒப்ப வைத்துக் கவிஞர் போற்றுகிறார்.
ஓவியஎழினி:
  • நாடகமேடைகளில் பல வண்ணங்களில்கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்டதிரைச்சீலைகள்தொங்குகினவற்றை “ஓவியஎழினி” கொண்டு அறிகிறோம்.
புனையா ஓவியம்:
  • வண்ணம் கலக்காமல்கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதைப்புனையா ஓவியம் என்பர்.
  • இன்றும், இது மென்கோட்டுஓவியமாக நடைமுறையில் உள்ளது.
நெடுநல்வாடை:
  • ஆடு முதலான 12 இராசிகளையும், விண்மீன்களையும்வரைந்த செய்தி, நெடுநல்வாடை கூறுகிறது.
தமிழரின்ஓவிய மரபு:
  • ஓவியங்களில் “நிற்றல், இருத்தல், கிடத்தல்” ஆகிய மனித இயல்புகளையும்
  • வீரம், சாந்தம், சினம், வியப்பு, உவகை” ஆகிய மெய்ப்பாடுகளையும்
  • உத்தமம், மத்திமம், அதமம், தசதாளம், நவதாளம், பஞ்சதாளம் முதலிய அளவுகளையும் வலியுறுத்துவது தமிழருக்கே உரிய ஓவியமரபுகளாகவிளங்குகின்றன.
மகேந்திரவர்மப்பல்லவன்:
  • சங்கக் காலத்தில் செழித்திருந்தஓவியக்கலை இடைக்காலத்தில் சிதைந்து மறைந்துபோகத் தொடங்கியது.
  • மறைந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள்பல்லவர்கள்.
  • 7ஆம் நூற்றாண்டில்தமிழகத்தைஆண்ட முதலாம் மகேந்திரவர்மப்பல்லவன் சிறந்த ஓவியன்.
  • கல்வெட்டுகள்இவனைச் “சித்திரகாரப்புலி” எனப்புகழ்கின்றன.
  • தட்சிணசித்திரம்” என்னும் ஓவிய நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.
சித்தன்னவாசல் – ஓவியக் கருவூலம்:
  • திருநந்திக்கரையில்சேரர் கால ஓவியங்கள் கிடைத்துள்ளன.
  • புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்கோவில் ஓவியங்கள் ஓவியக்கருவூலமாக வைத்து போற்ற தக்கது.
  • கி.பி.9ஆம் நூற்றாண்டில் “அவனிபசேகரஸ்ரீவல்லபன்” என்ற பாண்டிய மன்னன் காலத்தில், மதுரை ஆசிரியர் “இளம்கௌதமன்” இவ்வோவியங்களை வரைந்தார் என கல்வெட்டுகள்கூறுகிறது.
சோழர் கால ஓவியங்கள்:
  • சோழர்காலவனப்புமிக்கஓவியங்களைத்தஞ்சைப்பெரியகோவிலில் காணலாம்.
  • அதில் கவின்மிகுகயிலைகாட்சி உள்ளது.