நாடகக்கலை
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)
நாடகக்கலை

நாடகக்கலை

கலைகள்
நாடகக்கலை
நாடகம் – பொருள் விளக்கம்:
- நாடு
+ அகம் = நாடகம்
- நாட்டை
அகத்துள் கொண்டது நாடகம்.
- நாட்டின்
கடந்த காலத்தையும்நிகழ்காலத்தையும்வருங்காலத்தையும் தன் அகத்தேகாட்டுவதால், நாடகம் எனப் பெயர் பெற்றது.
- நாடகம்
என்பது உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி என்பது முற்றிலும் பொருந்தும்.
- கதையை, நிகழ்ச்சியை,
உணர்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாகஆடிக்காட்டுவதும்
நாடகம் என்பர்.
- இதற்குக்
கூத்துக்கலை என்னும் பெயர் உண்டு.
நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்:
- தமிழின்
தொன்மையான கலை வடிவம் நாடகம்.
- நாடகம்
என்பது “போலச் செய்தல்” என்னும் பண்பு அடிப்படையாக கொண்டது.
- பிறர்
செய்வதைப்போலதாமும் செய்து பார்க்க வேண்டும் என்ற மனித உணர்சித்தான் நாடகம்
தோன்றக் காரணம்.
- மரப்பாவைக்கூத்து->பொம்மலாட்டம்->தோல்பாவைக்கூத்து->நிழற்பாவைக்கூத்து என வளர்ச்சி அடைந்தது.
இலக்கியங்களில் நாடகம்:
- தொல்காப்பியமெய்பாட்டியல்நாடகப்பாங்கிலானஉணர்வுகளுக்கு
இலக்கணம் வகுத்துள்ளது.
- “கூத்தாட்டவைக்குல்லாத்தற்றே” என்னும் குறள் வழியாக நாடக அரங்கம்
இருந்த செய்தி அறியலாம்.
- சிலப்பதிகாரத்தில்
இளங்கோவடிகள்,
“நாடகமேத்தும்நாடகக் கணிகை” என்று மாதவியைகுறிப்பிடுகிறார்.
கூத்து:
- தனிப்பாடல்களுக்கு
மெய்ப்பாடு தோன்ற ஆடுவதை நாட்டியம் என்றும், ஏதேனும்
ஒரு கதையை தழுவி வேடம் புனைந்து ஆடுவதை நாடகம் என்றும் குறிப்பிட்டு
வந்துள்ளார்.
- நாட்டியம், நாடகம் இரண்டிற்கும்பொதுவாகக் “கூத்து” என்ற சொல்லேவழக்கில் இருந்தது.
அடியார்க்குநல்லார்:
- சிலப்பதிகாரத்திற்கு
உரை எழுதியவர்.
- இவர்
கூத்துவகைகளைப் பற்றியும், நாடகநூல்கள்
பற்றியும் தமது உரையில் கூறியுள்ளார்.
நாடக நூல்கள்:
- முறுவல், சயந்தம்,
செயிற்றியம்,
மதிவாணர்நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார்
கூத்து,
குணநூல்,
கூத்து நூல் முதலிய பல நாடக நூல்கள் நாடகத்திற்கு இலக்கணம்
வகுத்துள்ளது.
நாடகவியல்:
- பரிதிமாற்கலைஞர், செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல்எனும்நூலில் நாடகம் அதன்
விளக்கம்,
வகைகள்,
எழுதப்பட வேண்டிய முறைகள் பற்றி கூறியுள்ளார்.
நாடக ஆராய்ச்சி நூல்கள்:
- சுவாமி
விபுலானந்தர் = மதங்க சூளாமணி
- மறைமலையடிகள்
= சாகுந்தலம்
- இவ்விரண்டு
நூல்களும் நாடகம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள்.
தொழில்முறை நாடக அரங்குகள்:
- பம்மல்சம்பந்தனார், “நாடகத்தமிழ்” என்ற தம் நூலில் தொழில் முறை நாடக அரங்குகளைப்பற்றிய
செய்திகளை நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார்.
காலம்தோறும்நாடகக்கலை:
- ஏழாம்நூற்றாண்டில்மகேந்திரவர்மபல்லவன்
“மத்தவிலாசம்” என்ற நாடக நூலைஎழுதியுள்ளான்.
- பதினொன்றாம்நூற்றாண்டில்இராசராசசோழன்ஆட்சிக்
காலத்தில் “இராசராசேச்சுவர நாடகம்” நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
- நாயக்கமன்னர்கள்ஆட்சிக்காலத்தில்
குறவஞ்சி நாடகம் தோன்றின.
- பதினேழாம்நூற்றாண்டின்பிற்பகுதியில்
நொண்டி நாடகம் தோன்றின.
கட்டியங்காரன் உரையாடல்:
- பதினெட்டாம்நூற்றாண்டில்அருணாச்சலக்கவிராயரின்இராம
நாடகம்,
கோபாலகிருட்டினபாரதியின்நந்தனார் சரித்திரம் ஆகியன
கட்டியங்காரன்உரையாடலோடு முழுவதும் பாடல்களாகஅமைந்தன.
சமுதாய சீர்திருத்த நாடகங்கள்:
- காசி
விஸ்வநாதரின் “டம்பாச்சாரி விலாசம்”.
- பேராசிரியர்
சுந்தரனாரின் “மனோன்மணியம்”.
தேசிய நாடகங்கள்:
- “கதரின் வெற்றி” நாடகம் தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட
தேசிய சமுதாய நாடகம்.
- இதனைத்
தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி
முதலிய நாடகங்கள்நடத்தப்பட்டன.
சிறப்பிடம் பெற்றவர்கள்:
- பரிதிமாற்
கலைஞர்
- தமிழ்
நாடக பேராசிரியர்
- சங்கரதாசுசுவாமிகள்
- தமிழ்
நாடக உலகின்இமயமலை,
தமிழ் நாடக பேராசிரியர்
- பம்மல்சம்பந்தனார்
- தமிழ்
நாடக தந்தை
- கந்தசாமி
- தமிழ்
நாடக மறுமலர்ச்சி தந்தை
கவிமணியின் கூற்று:
- “நாடகச்சாலையொத்தநற்கலாசாலையொன்றுநீடுலகில் உண்டோ நிகழ்த்து” என்ற
கவிமணியின்கூற்றிற்குஏற்ப மக்களின் கண்ணை, செவியை, கருத்தைக்கவரும் வகையிலும் நாடகங்கள் கதை அழகோடு கவிதை அழகையும்
கொண்டு வாழ்வைத்தூய்மைப்படுத்தும் வகையிலும் அமைதல் வேண்டும்.