நாடகக்கலை

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

நாடகக்கலை

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)

நாடகக்கலை


கலைகள்
நாடகக்கலை
நாடகம் – பொருள் விளக்கம்:
  • நாடு + அகம் = நாடகம்
  • நாட்டை அகத்துள் கொண்டது நாடகம்.
  • நாட்டின் கடந்த காலத்தையும்நிகழ்காலத்தையும்வருங்காலத்தையும் தன் அகத்தேகாட்டுவதால், நாடகம் எனப் பெயர் பெற்றது.
  • நாடகம் என்பது உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி என்பது முற்றிலும் பொருந்தும்.
  • கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாகஆடிக்காட்டுவதும் நாடகம் என்பர்.
  • இதற்குக் கூத்துக்கலை என்னும் பெயர் உண்டு.
நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்:
  • தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம்.
  • நாடகம் என்பது “போலச் செய்தல்” என்னும் பண்பு அடிப்படையாக கொண்டது.
  • பிறர் செய்வதைப்போலதாமும் செய்து பார்க்க வேண்டும் என்ற மனித உணர்சித்தான் நாடகம் தோன்றக் காரணம்.
  • மரப்பாவைக்கூத்து->பொம்மலாட்டம்->தோல்பாவைக்கூத்து->நிழற்பாவைக்கூத்து என வளர்ச்சி அடைந்தது.
இலக்கியங்களில் நாடகம்:
  • தொல்காப்பியமெய்பாட்டியல்நாடகப்பாங்கிலானஉணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது.
  • கூத்தாட்டவைக்குல்லாத்தற்றே” என்னும் குறள் வழியாக நாடக அரங்கம் இருந்த செய்தி அறியலாம்.
  • சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், “நாடகமேத்தும்நாடகக் கணிகை” என்று மாதவியைகுறிப்பிடுகிறார்.
கூத்து:
  • தனிப்பாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவதை நாட்டியம் என்றும், ஏதேனும் ஒரு கதையை தழுவி வேடம் புனைந்து ஆடுவதை நாடகம் என்றும் குறிப்பிட்டு வந்துள்ளார்.
  • நாட்டியம், நாடகம் இரண்டிற்கும்பொதுவாகக் “கூத்து” என்ற சொல்லேவழக்கில் இருந்தது.
அடியார்க்குநல்லார்:
  • சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்.
  • இவர் கூத்துவகைகளைப் பற்றியும், நாடகநூல்கள் பற்றியும் தமது உரையில் கூறியுள்ளார்.
நாடக நூல்கள்:
  • முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர்நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்து நூல் முதலிய பல நாடக நூல்கள் நாடகத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளது.
நாடகவியல்:
  • பரிதிமாற்கலைஞர், செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல்எனும்நூலில் நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள் பற்றி கூறியுள்ளார்.
நாடக ஆராய்ச்சி நூல்கள்:
  • சுவாமி விபுலானந்தர் = மதங்க சூளாமணி
  • மறைமலையடிகள் = சாகுந்தலம்
  • இவ்விரண்டு நூல்களும் நாடகம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள்.
தொழில்முறை நாடக அரங்குகள்:
  • பம்மல்சம்பந்தனார், “நாடகத்தமிழ்” என்ற தம் நூலில் தொழில் முறை நாடக அரங்குகளைப்பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார்.
காலம்தோறும்நாடகக்கலை:
  • ஏழாம்நூற்றாண்டில்மகேந்திரவர்மபல்லவன் “மத்தவிலாசம்” என்ற நாடக நூலைஎழுதியுள்ளான்.
  • பதினொன்றாம்நூற்றாண்டில்இராசராசசோழன்ஆட்சிக் காலத்தில் “இராசராசேச்சுவர நாடகம்” நடைபெற்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
  • நாயக்கமன்னர்கள்ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகம் தோன்றின.
  • பதினேழாம்நூற்றாண்டின்பிற்பகுதியில் நொண்டி நாடகம் தோன்றின.
கட்டியங்காரன் உரையாடல்:
  • பதினெட்டாம்நூற்றாண்டில்அருணாச்சலக்கவிராயரின்இராம நாடகம், கோபாலகிருட்டினபாரதியின்நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன்உரையாடலோடு முழுவதும் பாடல்களாகஅமைந்தன.
சமுதாய சீர்திருத்த நாடகங்கள்:
  • காசி விஸ்வநாதரின் “டம்பாச்சாரி விலாசம்”.
  • பேராசிரியர் சுந்தரனாரின் “மனோன்மணியம்”.
தேசிய நாடகங்கள்:
  • கதரின் வெற்றி” நாடகம் தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்.
  • இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள்நடத்தப்பட்டன.
சிறப்பிடம் பெற்றவர்கள்:
  • பரிதிமாற் கலைஞர்    -        தமிழ் நாடக பேராசிரியர்
  • சங்கரதாசுசுவாமிகள்   -        தமிழ் நாடக உலகின்இமயமலை, தமிழ் நாடக பேராசிரியர்
  • பம்மல்சம்பந்தனார்    -        தமிழ் நாடக தந்தை
  • கந்தசாமி               -        தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை
கவிமணியின் கூற்று:
  • நாடகச்சாலையொத்தநற்கலாசாலையொன்றுநீடுலகில் உண்டோ நிகழ்த்து” என்ற கவிமணியின்கூற்றிற்குஏற்ப மக்களின் கண்ணை, செவியை, கருத்தைக்கவரும் வகையிலும் நாடகங்கள் கதை அழகோடு கவிதை அழகையும் கொண்டு வாழ்வைத்தூய்மைப்படுத்தும் வகையிலும் அமைதல் வேண்டும்.