முடியரசன்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

முடியரசன்

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

முடியரசன்


முடியரசன்
வாழ்க்கைக் குறிப்பு:
  • இயற் பெயர் = துரைராசு
  • ஊர் = மதுரை அடுத்துள்ள பெரியகுளம்
  • பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி
வேறு பெயர்கள்:
  • கவியரசு(குன்றக்குடிஅடிகளார்)
  • தமிழ்நாட்டு வானம்பாடி(அறிஞர் அண்ணா)
நூல்கள்:
  • முகில் விடு தூது
  • தாலாட்டுப் பாடல்கள்
  • கவியரங்கில்முடியரசன்
  • முடியரசன் கவிதைகள்
  • பாடுங்குயில்
  • காவியப்பாவை
  • ஞாயிறும்திங்களும்
  • மனிதனைத் தேடுகிறேன்
  • பூங்கொடி(தமிழ் தேசிய காப்பியம், தமிழக அரசு பரிசு பெற்றது)
  • வீரகாவியம்(தமிழ் வளர்ச்சி கழக பரிசு)
  • நெஞ்சு பொறுக்குதில்லையே
நாடகம்:
  • ஊன்றுகோல்(பண்டிதமணிகதிரேசசெட்டியார்பற்றியது)
குறிப்பு:
  • காரைக்குடி மீனாட்சி சுந்தரம் அர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப்பணிபுரிந்தார்
  • இவர் தமிழில் பிற மொழி கலப்பதை வன்மையாக கண்டித்தார்
  • தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகியவர்.
  • சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.
  • தமது மறைவின்பொழுதும்எச்சடங்குகளும் வேண்டாம் என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர்
  • இவரின் கவிதைகளைசாகித்தியஅகாடெமிஇந்தியிலும்ஆங்கிலத்திலும்மொழிப் பெயர்த்து வெளியிட்டுள்ளது
சிறப்பு:
  • அறிஞர் அண்ணா இவரைத் "தமிழ்நாட்டு வானம்பாடி” எனப்போற்றினார்
  • பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடிஅடிகளார் இவருக்கு கவியரசு என்ற பட்டத்தைவழங்கினார்
  • பூங்கொடி என்னும் காவியம் தமிழக அரசின் பரிசை பெற்றது
மேற்கோள்:
  • இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை
    இரண்டும் கொண்ட ஆறடா – வாழ்வு
  • வரம்பில்லையேல்எம்மொழியும் அழிந்து போகும்
    மணவினையில்தமிழுண்டோ, பயின்றவர் தம்முள்
    வாய்ப்பேச்சில்தமிழுண்டோ, மாண்டபின்னர்
    பிணவினையில்தமிழுண்டோ