தமிழ்த்தொண்டு
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)
தமிழ்த்தொண்டு

தமிழ்த்தொண்டு

தமிழ்த்தொண்டு
அகரமுதலி வரலாறு
அகராதி:
- அகரம்
+ ஆதி =அகராதி
- ஒரு
மொழியில் உள்ள எல்லாச்சொர்களையும் அகரவரிசையில் அமையும்படிஒருசேரத் தொகுத்து
விளக்கும்நூலை அகராதி என்பர்.
- அகராதி
என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது.
நிகண்டுகள்:
- தமிழ்
அகரமுதலி வரலாற்றில்,
செம்பாதிஇடத்தைப்பெறும்சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.
- நிகண்டுகளில்
பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன்திவாகரம்.
- நிகண்டுகளில்
சிறப்பானது = மண்டலபுருடர்இயற்றிய சூடாமணி நிகண்டு.
அகரமுதலி:
- திருமூலரின்திருமந்திரத்தில்
“அகராதி” என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது.
அகராதி நிகண்டு:
- நிகண்டுகளில்
ஒன்றான “அகராதி நிகண்டில்” அகராதி என்ற சொல் அடைமொழியாகஅமைந்துள்ளது.
- இந்நூலேஅகரமுதலிகள்தோன்றுவதற்கு
ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
- இந்நூலில்சொற்களின்
முதல் எழுத்துக்கள் மட்டுமே அகரவரிசையில் அமைந்திருந்தன.
சதுரகராதி:
- வீரமாமுனிவரின்சதுரகராதியேதமிழில்தோன்றிய
முதல் அகரமுதலி.
- இது
கி.பி.1732ஆம் ஆண்டு வெளிவந்தது.
- சதுர்
என்பதற்கு நான்கு என்று பொருள்.
- பெயர், பொருள்,
தொகை,
தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாக பொருள் விளக்கம் இருந்தது.
- வீரமாமுனிவர்
தமிழ்-இலத்தின் அகராதி, இலத்தின்-தமிழ்
அகராதி,
தமிழ்-பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு-தமிழ்
அகராதி,
போர்த்துகீசிய-தமிழ்-பிரெஞ்சு அகராதி வெளியிட்டார்.
சங்க அகராதி:
- “தமிழ்-தமிழ் அகராதி” ஒன்று லேவி-ஸ்பாடிஸ்என்பவரால்வெளியிடப்பட்டது.
- யாழ்பாணம்கதிரைவேலனாரால்
“தமிழ்ச்சொல் அகராதி” வெளியிடப்பட்டது. இதனை “சங்க அகராதி” எனவும் அழைப்பர்.
- இதில்
சொல்லின் மூலம் தருதல், மேற்கோள்
அமைதல் எனும் மரபு பின்பற்றப்பட்டுள்ளது.
பிற அகரமுதலிகள்:
- குப்புசாமிஎன்பவர்
“தமிழ்ப்பேரகராதி” வெளியிட்டார்.
- இராமநாதன்என்பவர்படங்களுடன்
கூடிய ஓர் அகரமுதலியைவெளியிட்டார். இந்நூல் “இருபதாம்நூற்றாண்டுத் தமிழ்
அகராதி” எனும்பெயருடன் வந்தது.
- வின்சுலோஎன்பவர்
“தமிழ்-ஆங்கிலப் பேரகராதி” வெளியிட்டார்.
பவானந்தர்:
- பவானந்தர்
என்பார் 1925ஆம் ஆண்டு “தற்காலத் தமிழ்ச்சொல்அகராதியும்”, 1937ஆம் ஆண்டு “மதுரைத்தமிழ்ப்பேரகராதியும்” வெளியிட்டார்.
சண்முகம்:
- மு.சண்முகம்என்பவரால்
“தமிழ்-தமிழ் அகரமுதலி” 1985ஆம்
ஆண்டு தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது
தமிழ் லெக்சிகன்:
- இருபதாம்நூற்றாண்டில்வெளிவந்த
மிகப்பெரிய அகரமுதலி “சென்னைப்பல்கலைக்கழக அகராதி”.
- இது
நன்கு திட்டமிட்டு முழுமையாக உருவாக்கப்பட்டது.
- இவ்வகரமுதலி
“தமிழ் லெக்சிகன்” என்னும் பெயரில் ஆறு தொகுதிகளாகவெளிவந்தது.
செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் அகரமுதலி:
- 1985ஆம் ஆண்டு “தேவநேயபாவாணர்”யின் “செந்தமிழ்
சொற்பிறப்பியல்பேரகரமுதலி”யின் முதல் தொகுதி வெளிவந்தது.
- இரண்டாவது
தொகுதி 1993ஆம் ஆண்டு வெளியானது.
- ஒவ்வொரு
சொல்லின் சொற்பிறப்பும், இனமொழிச்சொற்களுக்கானகுறிப்பும், பதிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளன.
- படங்களுடன்
வேலி வந்த இரண்டாவது அகரமுதலி இதுவேயாகும்.
கணினி உதவியுடன் அகரமுதலி:
- முழுமையாக
கணினி உதவியுடன் உருவாக்கப்பட்டுவெளிவந்த முதல் அகரமுதலி “கிரியாவின்
தற்காலத் தமிழ் அகராதி”.
- விளக்கச்சொற்களோடுவெளிவந்த
முதல் அகரமுதலி இதுவே.
கலைக்களஞ்சியம்:
- தமிழ்க்கலைக்களஞ்சியங்களின்
முன்னோடி = அபிதானகோசம்.
- இது
1902ஆம் ஆண்டு இலக்கியப் புராணஇதிகாசச்செய்திகளைக்கொண்டுவெளிவந்தது.
- இது
இலக்கியக் களஞ்சியம் ஆக திகழ்கிறது.
அபிதான சிந்தாமணி:
- 1934ஆம் ஆண்டு இலக்கியச்செய்திகளோடு, அறிவியல்
துறைப்போருகளையும்முதன்முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து வெளிவந்தது = அபிதான
சிந்தாமணி.
- இதனை
சிங்காரவேலனார் தொகுத்து வெளியிட்டார்.
தமிழ் வளர்ச்சி கழகம்:
- தமிழ்
வளர்ச்சி கழகம் முறையான “முதல் கலைக்களஞ்சியத்தை” தொகுத்து வெளியிட்டது.
- இது
பத்து தொகுதிகளை உடையது.
- இக்கழகம்
குழந்தைகள் கலைக்களஞ்சியம், நாடகக்
கலைக்களஞ்சியம்,
இசுலாமிய கலைக்களஞ்சியம் முதலிய பல கலைக்களஞ்சியங்களைவெளியிட்டது.
கலைச்சொல் அகரமுதலி:
- காலைக்கதிர்நிறுவனமுயற்சியால்பொதுஅறிவு, உளவியல்,
புவியியல்,
புள்ளியல்,
வரலாறு,
வானவியல் முதலிய துறைகளுக்கும் கலைச்சொல் அகரமுதலிகள்1960ஆம் ஆண்டு தொகுக்கக்ப்பட்டன.
- மணவைமுஸ்தபா
அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து
வெளியிட்டார்.
- அறிவியல்
கலைச்சொல் களஞ்சியம் 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
தேவநேயபாவாணர்
வாழ்க்கைக் குறிப்பு:
- ஊர்
= திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புத்தூர்
- பெற்றோர்
= ஞானமுத்து,
பரிபூரணம் அம்மையார்
சிறப்பு பெயர்:
- செந்தமிழ்ச்செல்வர்(தமிழக
அரசு)
- செந்தமிழ்
ஞாயிறு(பறம்புமலை பாரி விழாவினர்)
- மொழி
ஞாயிறு(தென்மொழி இதழ்)
படைப்புகள்:
- இயற்றமிழ்
இலக்கணம்(முதல் நூல்)
- கட்டுரை
வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம்
- ஒப்பியல்
மொழி நூல்
- திராவிடத்தாய்
- சொல்லாராய்ச்சிக்காட்டுரை
- உயர்தரக்
கட்டுரை இலக்கணம்
- பழந்தமிழ்
ஆட்சி
- முதல்
தாய்மொழி
- தமிழ்நாட்டு
விளையாட்டுக்கள்
- தமிழர்
திருமணம்
- இசைத்தமிழ்
கலம்பகம்
- பண்டைத்
தமிழ் நாகரிகமும்பண்பாடும்
- தமிழ்
வரலாறு
- வடமொழி
வரலாறு
- தமிழர்
வரலாறு
- தமிழ்
கடன் கொடுத்து தழைக்குமா?
- இன்னிசைக்கோவை
- திருக்குறள்
தமிழ் மரபுரை
- தமிழர்
வேதம்
- வேர்ச்சொல்
கட்டுரைகள்
- மண்ணில்
வின் அல்லது வள்ளுவர்கூட்டுடைமை
- தமிழ்
இலக்கிய வரலாறு
- செந்தமிழ்க்காஞ்சி(பாடல்
தொகுப்பு)
- இந்தியால்
தமிழ் எவ்வாறு கெடும்?
- மாந்தன்
தோற்றமும் தமிழர் மரபும்(இறுதி கட்டுரை)
குறிப்பு:
- உலக
முதல் மொழி தமிழ்;
திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழ் என்ற இவர்தம் கொள்கையை நிலைநாட்ட
வாழ்நாள் முழுவதும் முயன்றார்
- உலகத்
தமிழ் கழகம் தொடங்கினார்
- மன்னிப்பு
உருதுச் சொல்;
பொறுத்துக்கொள்க என்பது தமிழ்ச் சொல் என்றவர்
- தமிழை
வடமொழி வல்லான்மையில் இருந்து மீட்கவே இறைவன் தன்னை படைத்ததாககூறியவர்
சிறப்பு:
- அறிஞர்
அண்ணா = பாவாணர் தமிழ்மொழிக்கும்நாட்டுக்கும் இடைவிடாத நற்தொண்டாற்றி நம்
அனைவரின் நிலையினையும்உயர்த்தியவர், அவருடைய
புலமை தெளிவும் துணிவும் மிக்கது
- மறைமலைஅடிகளின்தனித்தமிழ்க்
கொள்கையை நாடு முழுக்க பரப்பியவர்
பாவலரேறுபெருஞ்சித்திரனார்
வாழ்க்கை குறிப்பு:
- இயற்
பெயர் = துரை மாணிக்கம்
- ஊர்
= சேலம் மாவட்டம் சமுத்திரம்
- பெற்றோர்
= துரைசாமி,
குஞ்சம்மாள்
சிறப்பு பெயர்:
- பாவலரேறு
- தற்கால
நக்கீரர்
படைப்பு:
- கொய்யாக்கனி
- ஐயை
- பாவியக்
கொத்து
- எண்சுவை
எண்பது
- மகபுகுவஞ்சி
- அறுபருவத்திருக்கூத்து
- கனிச்சாறு
- நூறாசிரியம்
- கற்பனை
ஊற்று
- உலகியல்
நூறு பள்ளிப்பறவைகள்
இதழ்:
- தென்மொழி
- தமிழ்ச்சிட்டு
- தமிழ்
நிலம்
குறிப்பு:
- உலக
தமிழ் முன்னேற்றகலகத்தைதொடங்கினார்
- மொழி
ஞாயிறு தேவநேயபாவாணரின்கொள்கைகளைப் பரப்பும் தலை மாணாக்கர்
ஜி.யு.போப்
வாழ்க்கை குறிப்பு:
- பெயர்
= ஜியார்ஜ்யுக்ளோபோப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப்
- பிறந்த
ஊர் = பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
- பிறப்பு
= கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம்
தேதி
- பெற்றோர்
= ஜான்போப்,
கேதரின்போப்
சிறப்பு பெயர்:
- தமிழ்
பாடநூல் முன்னோடி
- வேத
சாஸ்திரி
படைப்புகள்:
- தமிழ்
செய்யுட் கலம்பகம்
- Extracts from
Puranaanooru to Purapporulvenbaamaalai
- Elementary Tamil
Grammar
- The Lives of Tamil
Saints
இதழ்:
- Royal Asiatic
Quarterly
- The Indian
Magazine
- SiddhanthaDeepika
மொழிப்பெயர்ப்பு நூல்கள்:
- திருக்குறள்
- நாலடியார்
- திருவாசகம்
- சிவஞான
போதம்
- புறநானூறு(சில
பாடல்கள்)
- புறப்பொருள்
வெண்பா மாலை(சில பாடல்கள்)
குறிப்பு:
- இவருக்கு
தமிழ் கற்ப்பித்தவர் = இராமானுஜ கவிராயர்
- இவர்
19ஆம் வயதில் தமிழகம் வந்தார்
- இவரின்
திருவாசகமொழிப்பெயர்ப்பு மிகச் சிறப்பானது
- “திருக்குறளைஏசுநாதரின்இதயஒலி, மலை
உபதேசத்தின் எதிரொலி” எனப்புகழ்ந்தவர்
- Elementary Tamil
Grammar என்ற இலக்கண நூலைஎழுதியுள்ளார். இது
திரு.வி.கபபடித்த முதல் இலக்கண நூல்
- தம்
கல்லறையில் “தமிழ் மாணவன்” என்று பொரிக்க வேண்டும் என்றவர்
- இவர்
ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு அன்றும்புறநானூற்றுப் பாடல் ஒன்றை
மொழிப்பெயர்க்கும் வழக்கம் கொண்டிருந்தார்
சிறப்பு:
- ஜூலியன்வில்சன்
= “இருவினை கடந்த செல்வன் இசைத்தவாசகத்தை எல்லாம் வருவிளையாட்டாற் போலும்
மறுமொழி யதனில்வைத்தீர்
வீரமாமுனிவர்
வாழ்க்கைக் குறிப்பு:
- பெயர்
= வீரமாமுனிவர்
- இயற்பெயர்
= கான்ஸ்டாண்டின்ஜோசப்பெஸ்கி
- பெற்றோர்
= கொண்டல் போபெஸ்கி,
எலிசபெத்
- பிறந்த
ஊர் = இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
- அறிந்த
மொழிகள் = இத்தாலியம்,
இலத்தின்,
கிரேக்கம்,
எபிரேயம்,
தமிழ்,
தெலுங்கு,
சமஸ்கிருதம்
- தமிழ்க்கற்பித்தவர்
= மதுரைச்சுப்ரதீபக் கவிராயர்
- சிறப்பு
= முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை.
- காலம்
= 1680-1747
சிறப்பு பெயர்:
- தமிழ்
சிறுகதையின் முன்னோடி
- தமிழ்
உரைநடையின் தந்தை
- எள்ளல்
இலக்கிய வழிகாட்டி
- உரைநடை
இலக்கிய முன்னோடி
- செந்தமிழ்
தேசிகர்
- மொழிபெயர்ப்பு
துறையின்வழிக்காட்டி
- வீரமாமுனிவர்(மதுரை
தமிழ் சங்கம்)
- தமிழ்
அகராதியின் தந்தை
- ஒப்பிலக்கண
வாயில்
- தொகுப்புப்பணியின்
வழிகாட்டி
காப்பியம்:
- தேம்பாவணி(கிறித்தவசமயத்தாரின்
கலைக்களஞ்சியம்)
சிற்றிலக்கியம்:
- திருக்காவலூர்
கலம்பகம்
- கித்தேரி
அம்மாள் அம்மானை
- அடைக்கல
நாயகி வெண்பா
- அன்னை
அழுங்கல் அந்தாதி
- கருணாகரப்
பதிகம்
உரைநடை:
- வேதியர்
ஒழுக்கம்
- வேத
விளக்கம்
- பேதகம்
மறத்தல்
- லூதர்இனதியல்பு
- ஞானக்
கண்ணாடி
- வாமணன்
கதை
இலக்கணம்:
- தொன்னூல்
விளக்கம்(“குட்டித் தொல்காப்பியம்” என்பர்)
- கொடுந்தமிழ்
இலக்கணம்
- செந்தமிழ்
இலக்கணம்
மொழிபெயர்ப்பு:
- திருக்குறளின்அறத்துப்பால், பொருட்பால்இரண்டையும்இலத்தின் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்
அகராதி:
- சதுரகராதி(தமிழின்
முதல் அகராதி)
- தமிழ்-இலத்தின்
அகராதி
- போர்த்துகீசியம்-தமிழ்-இலத்தின்
அகராதி
ஏளன இலக்கியம்:
- பரமார்த்த
குரு கதை(தமிழின் முதல் ஏளன இலக்கியம்)
தொகுப்பு:
- தமிழ்
செய்யுள் தொகை
குறிப்பு:
- எழுத்து
சீர்திருத்தம் செய்து,
சில குறில் எழுத்துக்களையும் நெடில் எழுத்துக்களையும்வேறுபடுத்தி
மாற்றம் செய்தார்
- ஐந்திலக்கணநூலான
“தொன்னூல் விளக்கம்” என்னும் இலக்கண நூலைபடைத்தார். இதன் சிறப்பு கருதி
இந்நூலை “குட்டித் தொல்காப்பியம்” என்பர்
- சதுரகராதி
என்னும் அகராதி நூலை வெளியிட்டு பிற்கால அகராதி
நூல்களுக்கெல்லாம்வழிகாட்டினார்
- தேம்பாவணி
காப்பியத்திற்குவீரமாமுனிவரே உரை வடித்துள்ளார்
- திருச்சியைஆண்ட
சந்தா சாகிப்பிடம்திவானாக பணி புரிந்தார்
- இவர்
மறைந்த இடம் = அம்பலகாடு
- தனது
பெயரை முதலில் “தைரியநாதர்” என மாற்றிக்கொண்டார்
சிறப்பு:
- கவியோகிசுத்தானந்த
பாரதி = சாரமாம்தேம்பாவணியினைத்தொடினும், தமிழ்
மனம் கமழும்என்கரமே
- கவியோகிசுத்தானந்த
பாரதி = தமிழ் மாலைகளில் ஒரு வாடாதகற்பகமாலை காணப்படுகிறது. அதுவே தேம்பாவணி
என்னும் பெருங்காப்பிய மாலை
- திரு
பூர்ணலிங்கம் பிள்ளை = இது சீவகசிந்தாமணிக்கு இணையான காவியமாகும்
- கால்டுவெல்
= தமிழ் இலக்கியத்தில் தலை சிறந்த நான்கு காவியங்களுள்தேம்பாவணியும் ஒன்று
- ரா.பி.சேதுபிள்ளை
= தேம்பாவணி தமிழ் அன்னையின் கழுத்தில் வாடாதமாலையாகத்திகழ்கின்றது.
காவலூர்க் கலம்பகம் கதம்பமாலையாகக்காட்சியளிக்கிறது; தொன்னூல்பொன்னூலாகஇலங்குகின்றது; சதுரகராதிமுத்தாரமாகமிளிர்கிறது; வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள்ஒருவராக விளங்குகிறார்