தமிழகம் ஊரும்பேரும்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

தமிழகம் ஊரும்பேரும்

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (பொதுத் தமிழ்)




தமிழகம்
ஊரும்பேரும்
குறுஞ்சி நிலா ஊர்கள்:
மலை, கரடு, பாறை, குன்று, குருச்சி, கிரி
  • மலையின் அருகே உள்ள ஊர்களுக்குநாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலைஎனப்பெயர்கள் உள்ளன.
  • ஓங்கியுயர்ந்தநிலபகுதி – மலை
  • மலையின் உயரத்தில் குறைந்தது – குன்று
  • குன்றின் உயரத்தில் குறைந்தது – கரடு, பாறை
  • குன்றைஅடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி என வழங்கப்பெற்றன.
  • மலையைக்குறிக்கும் வடசொல், “கிரி” என்பதாகும். சிவகிரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோத்தகிரிஎன்பனமலையையொட்டி எழுந்த ஊர்பெயர்கள்.
  • குருச்சி, ஆழ்வார்க்குருச்சி, கல்லிடைக்குருச்சி, கள்ளக்குருச்சி என்ற பெயர்கள் எல்லாம் குறிஞ்சி நிலா ஊர்களே. குறிஞ்சி என்னும் சொல்லேமருவிக்குருச்சிஆயிற்று.
முல்லை நிலா ஊர்கள்:
காடு, புரம், பட்டி, பாடி
  • அத்தி(ஆர்) மரங்கள் சூழ்ந்த ஊர் “ஆர்க்காடு” எனவும், ஆல மரங்கள் நிறைந்த ஊர் “ஆலங்காடு” எனவும், களாச்செடிகள் நிறைந்த ஊர் “களாக்காடு” எனவும் பெயரிட்டனர்.
  • காட்டின் நடுவில் வாழ்ந்த மக்கள், அங்குத்திரியும்விலங்குகளால்தமக்கும், தம் கால்நடைகளுக்கும் ஊறு நேராவண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்தனர். அவ்வூர்கள் “பட்டி, பாடி” என அழைக்கப்பட்டன.(காளிப்பட்டி, கோவில்பட்டி, சிறுகூடல்பட்டி)
மருத நில ஊர்கள்:
ஊர், குடி, சோலை, பட்டி, குளம், ஏரி, ஊரணி
  • நிலவளமும், நீர்வளமும்பயிர்வலமும் செறிந்த மருதநிலக்குடியிருப்பும் “ஊர்” என வழங்கப்பட்டது.
  • ஆறுகள் பாய்ந்த இடங்களில் “ஆற்றூர்” என வழங்கப்பட்டபெயர்கள் காலப்போக்கில் “ஆத்தூர்” என மருவியது.
  • மரங்கள் சூழ்ந்த பகுதிகளில் மரங்களின் பெயரோடு ஊர் பெயரை சேர்த்து வழங்கினர்.(கடம்பூர், கடம்பத்தூர், புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி).
  • குளம், ஏரி, ஊருணி ஆகிவற்றுடன் ஊர் பெயர்களி இணைத்து வழங்கினர்.( புளியங்குளம், வேப்பேரி, பேராவூரணி).
நெய்தல் நிலா ஊர்கள்:
பட்டினம், பாக்கம், கரை, குப்பம்
  • கடற்கரை பேரூர்கள் “பட்டினம்” எனவும், சிற்றூர்கள் “பாக்கம்” எனவும் பெயர் பெற்றிருந்தன.
  • பரதவர் வாழ்ந்த ஊர்கள் “கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை” எனப் பெயர் பெற்றிருந்தன.
  • மீனவர்கள் வாழும் இடங்கள் “குப்பம்” என்று அழைகப்படுகிறது.
திசையும் ஊர்களும்:
ஊர், பழஞ்சி
  • நாற்றிசைப்பெயர்களும்ஊர்களுடன்குறிக்கப்பெற்றன. ஊருக்கு கிழக்கே இருந்த பகுதியை “கீழூர்” எனவும், மேற்கே இருந்த பகுதியை “மேலூர்” எனவும் பெயரிட்டனர்.
நாயக்கமன்னர்கள்:
  • நாயக்கமன்னர்கள்தமிழகத்தை72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தனர்.
  • அவர்கள் ஊர்ப்பெயருடன்பாளையத்தை சேர்த்து வழங்கினர்.(ஆரப்பாளையம், மதிகோன்பாளையம், குமாரப்பாளையம், மேட்டுப்பாளையம்)
ஊர் பெயர்கள் மாறுதல்:
  • கல்வெட்டுகளில் காணப்படும் “மதிரை” மருதையாகி இன்று “மதுரை”யாகமாறியுள்ளது.
  • கோவன்புத்தூர் என்னும் பெயர் “கோயமுத்தூர்” ஆகி, இன்று “கோவை” ஆக மருவியுள்ளது.