கவிமணி

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

கவிமணி

G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)

கவிமணி

கவிமணி
வாழ்க்கைக்குறிப்பு:
  • ஊர் = கன்னியாகுமரி மாவட்டம் தேரூர்
  • பெற்றோர் = சிவதாணுபிள்ளை, ஆதிலட்சுமி அம்மையார்
  • துணைவியார் = உமையம்மையார்
  • ஆசிரியர் = சாந்தலிங்க தம்பிரான்
  • காலம் = 27.08.1876-26.09.1954
சிறப்பு பெயர்கள்:
  • கவிமணி(சென்னை மாகாணத் தமிழ் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார்)
  • குழந்தை கவிஞர்
  • தேவி
  • நாஞ்சில் நாட்டு கவிஞர்
  • தழுவல் கவிஞர்
நூல்கள்:
  • அழகம்மைஆசிரியவிருத்தம்(இயற்றிய முதல் நூல்)
  • காந்தளூர் சாலை
  • மலரும்மாலையும்
  • ஆசிய ஜோதி
  • நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்(நகைச்சுவை நூல்)
  • குழந்தைச் செல்வம்
  • தேவியின் கீர்த்தனைகள்
  • தீண்டாதார் விண்ணப்பம்
  • கவிமணியின்உரைமணிகள்
குறிப்பு:
  • எட்வின்ஆர்னால்ட் என்பார் எழுதிய light of asiaஎன்ற நூலை அழகிய தமிழில்ஆசிய ஜோதி என மொழிப்பெயர்த்துள்ளார்
  • பாரசீக கவிஞர் உமர்கய்யாம் பாடல்களை தமிழில்ரூபாயத் என்ற தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்
  • மும்மொழிப் புலமை வாய்ந்தவர்
சிறப்பு:
  • இனிய தமிழில் எவரும் விளங்கப் பாடல் இயற்றும் திறம் மிக்கவர்
  • ரசிகமணிடி.கே.சி = தேசிய விநாயகம்பிள்ளையின்பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ் செல்வம்; அறிய செல்வம், தெவிட்டாத அமிர்தம்; ஆயுள் நாள் முழுவதும் தமிழ் மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கத் கூடிய வாடாதகற்பகப்பூச்செண்டு
  • நாமக்கல் கவிஞர் = தேசிய விநாயகத்தின்கவிப்பெருமை – தினமும் கேட்பது என்செவிப் பெருமை
  • டி.கே.சண்முகம் =  கவிமணியின்கவிதைகளைப் புரிந்து கொள்வதற்குப்பண்டிதராகவேண்டியதில்லை; படிக்கத் தெரிந்த எவரும் பொருள் கொள்ளத்தக்கஎளியநடை
  • மு.வரதராசனார் = போராட்டமும் பரபரப்பும் மிகுந்த காலத்தில் வாழ்ந்த போதிலும் அவருடைய உள்ளமும், கவிதைகளும் அமைதியும் இனிமையும்உடையனவாகவிளங்கியதுவிந்தையே
  • நாமக்கல் கவிஞர் = துரும்பெனமெலிந்த தேகம், துலங்கிடும் குளிர்ந்த பார்வை, இரும்பினும் வலிய உள்ளம், இனியவே செய்யும் எண்ணம், பரம்பொருள் நினைவே காட்டும் பாரெல்லாம் பரந்த நோக்கம், கரும்பினும் இனிய சொற்கள், கவிமணி வடிவம் ஆகும்
மேற்கோள்:
  • தோட்டத்தில் மேயுதுவெள்ளைப் பசு – அங்கே
    துள்ளிக்குதிக்குதுகன்றுக்குடடி
    அம்மா என்குதுவெள்ளைப் பசு
  • ஓடும் உதிரத்தில் – வடிந்து
    ஒழுகும் கண்ணீரில்
    தேடித் பார்த்தாலும் – சாதி
    தெரிவதுண்டோ அப்பா?
  • உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்
  • உருவெடுப்பது கவிதை
    தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
    தெரிந்து ரைப்பது கவிதை
  • மங்கையராகப்பிறப்பதற்கே நல்ல
  • மாதவம்செய்திட வேண்டும் அம்மா