ந.பிச்சமூர்த்தி | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

ந.பிச்சமூர்த்தி | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV



ந.பிச்சமூர்த்தி (நவம்பர் 8, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கியமுன்னோடிகளுள்ஒருவராகக்கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம்பிணைந்த கதை சொல்லும் பாணியினைதமிழுக்குஅறிமுகப்படுத்தியவர்பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும்பணியாற்றியவர். இவரின் படைப்புகள்அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன
வாழ்க்கை
கும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீக்ஷிதர் - காமாட்சியம்மாள்தம்பதியருக்குநான்காவதுகுழந்தையாகப்பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். நடேச தீக்ஷிதர் தமிழ்சமஸ்கிருதம்தெலுங்கு மற்றும் மராட்டிமொழிகளில் ஹரிகதாகலாட்சேபம் செய்யுமளவிற்குத் தேர்ச்சி பெற்றவர். சைவப்புராணப்பிரசங்கங்கள் செய்தவர்.
பிச்சமூர்த்திகும்பகோணத்தில் தன் பள்ளிப்படிப்பையும்கல்லூரிப்படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று,சென்னை சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்றார். 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப்பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப்பணிபுரிந்தார்.
பிச்சமூர்த்திநவ இந்தியா பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் எழுத்துக்கள் சுதேசமித்திரன்சுதந்திர சங்குதினமணிமணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத்தொடங்கின.
இந்தத்தத்துவமரபில் வாழ்ந்து வந்த செழுமையின்உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின்அடிநாதமாகஇழையோடியது. "இலக்கியமும்நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித்தள்ளும் சக்தி அல்லது எதுவோ..." என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவேபிச்சமூர்த்தியின்படைப்புகள்வெளிப்பட்டன.
படைப்புகள்
சிறுகதை
·         பதினெட்டாம்பெருக்கு
·         மோகினி
·         மாங்காய் தலை
·         காபூலிக் குழந்தைகள்
·         விஜயதசமி
ஆர்வமூட்டும் செய்திகள்
·         பிச்சமூர்த்திக்கு அவரின் பெற்றோர் அவர் பிறந்தவுடன்இட்ட பெயர், வேங்கட மகாலிங்கம். இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன. அற்பமான பெயர்களைக் கொண்டு அழைத்து வந்தால் காலன் அவர்களை அழைத்துச் செல்லமாட்டான் என்ற நம்பிக்கையில் இவரை "பிச்சை" என்று அழைத்தனர். பின்னாளில் பிச்சை, பிச்சமூர்த்திஆனார்.
·         பிச்சமூர்த்திஸ்ரீராமானுஜர் என்னும் திரைப்படத்தில்ஆளவந்தார்வேடமேற்றுநடித்திருக்கிறார்.
·         பிச்சமூர்த்திஇயல்பிலேயே ஆன்மீக விஷயங்களிலும், துறவிலும் நாட்டம் கொண்டவராகஇருந்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பின்னரும் ஒரு ஆண்டு காலம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சந்நியாசத்தை விரும்பி ஊர் ஊராகஅலைந்திருக்கிறார். தன்னைத்துறவியாக்க வேண்டி, தனக்கு உபதேசம் செய்யுமாறு ரமணமகரிஷியிடமும் சித்தர்குழந்தைசாமியிடமும் அணுகி நின்றார். ஆனால் அவர்கள் இல்லறவாழ்க்கைதான்பொருத்தமானதென்றுஉபதேசித்திருக்கிறார்கள்.
சிந்தனைச் சிதறல்கள்
·         "எனக்கு எப்பொழுதும் உணர்ச்சிதான் முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாவது இடம்தான் தருவேன். ஆகையால் எப்பொழுதுமே ஒரு திட்டம் போட்டு குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான் எழுதவில்லை. உணர்வே என் குதிரையாகிவிட்டபடியால் நான் ஒரு சமயம் நட்சத்திர மண்டலத்தில்பொன்தூள்சிதறப்பறப்பேன். ஒரு சமயம் வெறும் கட்டாந்தரையில் "ஏபால்டில்" செய்வேன். என் மனதிலும் இந்த இரண்டு அம்சங்கள் பின்னிக்கிடப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஒரு பகுதி சிறகு விரித்து, சொல்லுக்குஎட்டாத அழகு ஒன்றை நாடி எப்பொழுதுமே பறந்து கொண்டிருக்கிறது. இந்தப்பகுதியின் ஆட்சிக்கு உட்பட்ட போதெல்லாம் வெறும் கற்பனையாகவே கதைகள் வருகின்றன. மற்றொரு பகுதி எல்லோரையும் போல் மண்ணில் உழலுகிறது. அப்பொழுதெல்லாம்உலகின் இன்ப துன்பங்களைப் பற்றி இயற்கையை ஒட்டிய முறையில் எழுதுகிறேன்"
·         "எழுதுவது ஒரு கலைஞனுக்கு இயல்பானது... மல்லிகை பூப்பது போல, விதைகள் விழுந்து மரமாவது போல... அறிவுக்குப்புலப்படாதபாலுணர்வின் தூண்டுதல் போல..."
பிற கவிஞர்களின் கருத்துக்கள்
·         "பிச்சமூர்த்தியின்இலக்கியவெளிப்பாடுகள்நிறைவேறாத துறவு மோகத்தின் இன்னொரு வடிகாலாக இருந்தது" – கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன்