தமிழகத்தின் வேர்ட்ஸ்வார்த் வாணிதாசன் | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

தமிழகத்தின் வேர்ட்ஸ்வார்த் வாணிதாசன் | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV






கவிஞரேறுவாணிதாசன்

இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு

புனைப்பெயர்: ரமி 

ஊர்:வில்லியனூர்(புதுவை) 

பெற்றோர்: அரங்கதிருக்காமு, துளசியம்மாள் 

பிறப்பு:  22-7-1915 

இறப்பு: 7-8-1974

சமூகப் பன்ங்களிப்பு: கவிஞர்

சிறப்பு பெயர்கள்:

கவிஞரேறு, தமிழகத்தின்வேர்ட்ஸ்வார்த்,தமிழ்நாட்டுத்தாகூர்,


வாழ்க்கைக் குறிப்பு:

வாணிதாசன், பாவேந்தர்பாரதிதாசனிடம்தொடக்கக் கல்வி பயின்றவர். அத்தொடக்கக்கல்வியேபாப்புனையும்தமிழுணர்விற்கும்தொடக்கமாயிற்று. இவர்தம்பாடல்கள், சாகித்தியஅகாதெமி வெளியிட்ட 'தமிழ்க்கவிதைக் களஞ்சியம்' என்ற நூலிலும்தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட புதுத்தமிழ்க்கவிமலர்கள் என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவர் பிரெஞ்சுமொழியிலும் புலமை பெற்றவர். 'தமிழ்-பிரெஞ்சுகையகரமுதலி'என்ற நூலை வெளியிட்டுள்ளார். பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இவருக்கு 'செவாலியர்'என்ற விருதினைவழங்கியுள்ளார். மேலும் 'கவிஞரேறு', 'பாவலர் மணி'முதலிய பட்டங்களும்வாணிதாசனுக்குவழங்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர். 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப்பணிபுரிந்தவர்.

பாரதிதாசன்அடியொட்டிப்பாடியகவிஞர்களைஅக்காலத்தேவெளிவந்த'பொன்னி' இதழ், 'பாரதிதாசன் பரம்பரை' என்னும் தலைப்பிட்டு அறிமுகப்படுத்தியது. பாரதிதாசன்பரம்பரையினருள்வாணிதாசன்குறிப்பிடத்தக்கவர்.

இயற்கைப் புனைவு இவருடைய பாடல்களில் சிறந்து விளங்குவதைக் காணலாம். எனவே இவரை 'தமிழகத்தின்வேர்ட்ஸ்வார்த்'என்று பாராட்டுகின்றனர்.கவிஞரேறுவாணிதாசனுடையதமிழ்த்தொண்டைப்பாராட்டித் தமிழக அரசு இவர் குடும்பத்துக்கு 10000 ரூ பரிசு வழங்கியுள்ளது. இவர் பெயரால்சேலியமேட்டில் ஓர் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.

பாரதிதாசனின் கவிதை வளத்தையும்உள்ளத்தையும்அறிந்தே திரு. வி. க. 'திருவாணிதாசர் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும்', என்றார். மயிலைசிவமுத்து, 'தமிழ்நாட்டுத்தாகூர்' வாணிதாசனார் என்று புகழ்ந்தார்.தமிழ் நாடு அரசு கவிஞர் வாணிதாசன் நூல்களை நாட்டுடைமைஆக்கியுள்ளது.

கவிஞர் வாணிதாசன் எழுதிய நூல்கள்

   
இரவு வரவில்லை
   
இன்ப இலக்கியம்
   
இனிக்கும் பாட்டு
   
எழில் விருத்தம்
   
எழிலோவியம்
   
குழந்தை இலக்கியம்
   
கொடி முல்லை
   
சிரித்த நுணா
   
தமிழச்சி
   
தீர்த்த யாத்திரை
   
தொடுவானம்
   
பாட்டரங்கப்பாடல்கள்
   
பாட்டு பிறக்குமடா
   
பெரிய இடத்துச் செய்தி
   
பொங்கற்பரிசு
   
வாணிதாசன் கவிதைகள்